Showing posts with label photos. Show all posts
Showing posts with label photos. Show all posts

Tuesday, July 21, 2009

சூரியனை விழுங்கிய பாம்பு(எ) நிலா...சூரிய கிரகணம் சில புகைபடங்கள்( மீள்)

சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது..ஆனால் நிசத்தில் சூரியனை விழுங்கும் பாம்பை,மன்னிக்கவும்,சூரியனை நிலா மறைக்கும் (ஆகஸ்டு-1-2008)படங்களை பாருங்கள்,

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
இது சைபீரியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்,ஒரு சில நிமிடங்கள் சூரியன் முழுவதுமாக மறைந்தது,இக்கிரகணம் கனடா,கீரீன்லாந்து,மத்திய இரஷ்யா,கிழக்கு கசகஸ்தான்,மேற்கு மங்கோலியா மற்றும் சீனாவிலும் முழுமையாக தெரிந்தது....!

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் , மீண்டும் 7 ஆண்டுகள் கழித்துதான் வரும்....

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் 2017 வருடம் வடக்கு அமரிக்காவிலும்,ஐரோப்பாவில் 2026லும்,ரஸ்யாவில்2030...தெரியும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

Saturday, June 13, 2009

கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல!:இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி


நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது!

தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் 'நெற்றிக்கண்' புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு :

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான் பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து…

'மாவீரன்' பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982-ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது.

கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன்-சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகின்றது!

பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிசனர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டிஜிபி சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க-அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை டிஜிபி சண்முகம் பதிவு செய்தார்!

இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது!Image

1986-ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசன்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிசனர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிசார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

1982-ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்….

1986-ல் சென்னை போலிஸ் கமிசனர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்…

தமிழக 'க்யூ' பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்!

சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஜினல் பிரபாகரன்தானா என்பதை உறுதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது!

அந்த அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ.3 லட்சம்.

அந்த அமைப்பின் இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே 18-ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982-ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986-ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்!

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே 19-ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுணர்களின் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை!

இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான அந்த அமைப்பின் தென் இந்திய ஆணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இந்தியா திரும்பினர்!

இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்!

இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது!

நன்றி அதிகாலை
நெற்றிக்கண்

Thursday, August 7, 2008

சூரியனை விழுங்கிய பாம்பு(எ) நிலா...சூரிய கிரகணம் சில புகைபடங்கள்

சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது..ஆனால் நிசத்தில் சூரியனை விழுங்கும் பாம்பை,மன்னிக்கவும்,சூரியனை நிலா மறைக்கும் (ஆகஸ்டு-1-2008)படங்களை பாருங்கள்,

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
இது சைபீரியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்,ஒரு சில நிமிடங்கள் சூரியன் முழுவதுமாக மறைந்தது,இக்கிரகணம் கனடா,கீரீன்லாந்து,மத்திய இரஷ்யா,கிழக்கு கசகஸ்தான்,மேற்கு மங்கோலியா மற்றும் சீனாவிலும் முழுமையாக தெரிந்தது....!

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் , மீண்டும் 7 ஆண்டுகள் கழித்துதான் வரும்....

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் 2017 வருடம் வடக்கு அமரிக்காவிலும்,ஐரோப்பாவில் 2026லும்,ரஸ்யாவில்2030...தெரியும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

Saturday, May 10, 2008

பயணம்.....



ஒரு சின்ன கவிதை முயற்சி.... மேலும் அதிகம் அன்புடன் பார்க்க,இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது நான் பயணித்துக்கொண்டிருப்பேன்.....

க இரா.செந்தில் நாதன்

Sunday, May 4, 2008

என் பார்வையில் மலேசியா...5

கடந்த இரண்டரை ஆண்டுகள்
மலேசிய வாசம், முற்றுப்பெருகிறது..ஆம் இந்த மாத மத்தியில் இந்தியா திரும்பவிருப்பதால்,இந்த வாழ்க்கைபயணத்தில், பல சிறந்த பாடங்கள் கற்றுத்தந்த மலேசியாவிற்கும்,மக்களுக்கும் என் நன்றிகள்,இங்கு நான் கண்டவரை , அல்லது என் வரையில் எந்தவொரு கசப்பான் சம்பவங்கள் நிகழவில்லை, ஒரு சில சிறு சிறு விசயங்கள் தவிர, பல நல்ல நண்பர்களையும்,அறிவையும் உருவாக்கியுள்ளது,

அந்த ஒருசில விசயங்கள்... விரைவில்...


இதுவரை...
என் பார்வையில் மலேசியா..1,

என் பார்வையில் மலேசியா..2,

என் பார்வையில் மலேசியா..3,

என் பார்வையில் மலேசியா..4,

இடுகைகளில் மலேசியாவில் நான் சென்றுபார்த்த ஒரு சில இடங்களில் ஒரு சில விசயங்களை பகிர்ந்து கொண்டேன்...
1.லங்காவி தீவு.. காண்க ஜில்லேன்று ஒருமலேசியா டிபிசிடி விரைவில்
2.கெண்டிங் மலைவாசற்தலம்.. இது ஒரு பொழுதுபோக்கு பூங்கா..
3.கேமரூன் மலைவாசற்தலம்.. இங்கு
4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்.. விரைவில்
5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்.. விரைவில்
6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்... விரைவில்
7.பிறை பறவைகள் சரணாலயம்..விரைவில்
8.பினாங்கு அதன் சுற்றுப்புறங்கள்..விரைவில்
9.லம்போங் பூஜோங் அருங்காட்சியகம் இதை இங்கு டிபிசிடி அவரது பதிவில் காண்க..
அதன் தொடர்ச்சியாக மலசியாவில் இந்தியர்களிடையே மிக புகழ் பெற்ற ,மாரான் திரு.மரத்தாண்டவரை இந்த இடுகையில் காண்போம்...புகைபடபதிவு...


View Larger Map


Friday, May 2, 2008

மதம்..... பிடிக்காத.........மதம்......?????





முந்தைய பகுதி 1


முந்தைய பகுதி 2

ஒஷோ மறக்க,மறுக்க முடியாத மனிதர்....?,நமக்கு நெருங்கிய,அல்லது உறவினரோ நம்மைவிட்டு பிரியும் ,இறக்கும் தருணங்கள்....மிக கடினமானவை... ஆனால் அத்தகைய இறப்பை ஒரு விழாவாக கொண்டாட செய்தவர்...ஓஷோ... !

ஓஷோ...ஒரு வித்தியாசமானவர்,...!

"..நீங்கள் பேசுவது உண்மையாய் இருக்கலாம் , ஆனால் நான் நல்லதை (சில நல்ல பொய்கள்)மட்டும் பேசுவேன்..."


அவரிடம் தினமும் 60மிகி அளவு வேலியம்(Valium) எனும் போதை பொருள் உட்கொல்லும் பழக்கம் இருந்தது,மேலும் அவர் நைட்ரஸ் ஆக்சைடு(N2O) எனும் சிரிப்பூட்டும் வாயு நுகரும் பழக்கம் கொண்டவர் என்றும் கூறப்படுகின்றது...

ரஜினீஸ் புரம்...

1980 களில் ,ஓஷோ அவர்தம் ,வழிதொடர்பவர்களின் வேண்டுகோளின்படி,அமரிக்காவின் ஓரிகான் மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார்...அங்கு அவர்களுக்காக மத்திய ஒரிகானில் சுமார் 64000 ஏக்கர் நிலம் ,$5.75 மில்லியன் மதிப்பில் ,அதாவது 30 மடங்கு சந்தை நிலவரத்தைவிட அதிகம் கொடுத்து வாங்கப்பட்டது...

View Larger Map


" தியானம் கட்டாயமாக வியாபாரமாக்கப்பட கூடாது ஆச்சார்யா ரஜ்னீஷ்1971"

ஓஷோவிடம் ஏறக்குறைய 90 கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருந்தன...


ஆனால் 1985 வருடம்,போதை பொருள வைத்துஇருத்தல்,மற்றும் குடி நுழைவு முறைகேடு,உயிர்கிருகி தாக்குதல்,போன்ற பல்வேறு காரணங்கள் ஒஷோ மற்றும் அவரது ஆசிரம தலைமை நிர்வாகி மா ஆனந்த் ஷீலா மீது குற்றம் சாட்டி ,ஓஷோ நாடுகடத்தப்பட்டார்...மா ஆனந் ஷீலா சிறைதண்டனை பெற்று , அவர் நன்னடத்தை காரணமாக 1988 ல்,விடுதலை பெற்று தற்போழுது சுவிட்சர்லாந்தில் தாதியர் விடுதிவைத்துள்ளார்...


இதன் பிறகு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு,இந்தியா திரும்பிய >ஓஷோ...உடல்நலக்குறைவினால்,ஜனவரி 19 ,1990ல் இயற்கை எய்தினார்...

அவருக்கு அமெரிக்காவில் ஆர்சனிக் விசம்,மற்றும் அணுக்கதிர் வீச்சுக்கு ஆட்படுத்தப்பட்டார் எனவும்,கூறப்படுகின்றது...

முற்றுலுமாக புரிந்து கொள்ளப்படாத ஓஷோ ஒரு,மர்மம் தான்,பல்வேறு தியான முறைகளை,உருவாக்கியவர்,மனிதனை கடவுளின் நிலைக்கு (அ)மேம்பட்ட நிலைக்கு உயர்த்த வழி காட்டியவர்,.... ஆனால்
அவரும் சராசரி மனிதர்களைப்போல்,பாலுணர்வும்,சொகுசான வாழ்க்கை முறைகளையும்,ஆடம்பரங்களையும் விருப்பினார்....அனுபவித்தார், ஆகவே.....?????

மனிதன் கடவுளை அடைதல் அ மேம்பட்ட நிலையை அடைதல் என்றால் என்ன...?
இருக்கும் நிலையில் இருந்து ஒரு மேன் மாறுதலை அடைதல் எனக்கொள்ளலாமா..ஆம் இது உடல்,மனம்,செயல் சார்ந்தது...ஒரு வேளை உணவு இல்லாதவனுக்கு, உணவு கிடத்தால் அவன் அளவில் அது உடல்மனம் சார்ந்த மேம்படுதல்,இதுவே ஒரு இளைஞனிடம் அவன் காதலி காதலை ஏற்றுக்கொண்டால் அது மனம் சார்ந்த மேன்படுதல்,இது பிறகு மாறலாம், ஆகவே ஒரு சில சிறிய அல்லது தற்காலிக மாற்றங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும்,எதுவுமே நீண்ட கால மகிழ்ச்சியை தராது,

எந்த ஒரு மதமும்,மார்க்கமும்,மனிதனை கடவுளாக்காது,மேம்பட்டவனாக ஆகக் கூடிய வழிமுறைகளை காட்டும், கற்றுக்கூட தராது....ஆம் மனிதம் மேம்பட்டவனாக மாறுவது என்பது அவனுள் ,அவன் எண்ணங்களுள் ஏற்படும் மாற்றமேயன்றி வேறில்லை,எண்ணம் நல்லனவாக,இருந்தால் சொல்,செயல்,நல்லனவாகும்...

இக்கட்டுரை யாவும் என் சொந்த கருத்து ,யாவரேனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் ,மன்னிக்கவும்...

தொடர்புடைய முகவரிகள்..
தாபான்

புத்தகம்

ஓஷோ

விடுதலை முண்னணி


அன்புடன்
கஇரா.செந்தில்நாதன்




உலகின் மிக நீளமான் கூந்தல் கொண்ட பெண் &பெண்கள் &குடும்பம்....


இந்திய பெண்கள் மட்டும் அல்ல,உலக பெண்கள் அனைவருக்குமே,கூந்தலின் மீது அலாதி ஆர்வம் உண்டு,நம்ம கோலங்கள் பிருந்தாதாஸ்... ?கூந்தலுக்கு இயற்கையான வாசம் உண்டா இல்லையா.. என்று விவாதம் நடந்ததாக கூட புராணங்களில் கூறப்படுகின்றது..

அதன் தொடர்புடைய செய்திகள்

தற்போதைக்கு உலகின் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண்... ஷி கியுபிங்(xie qiuping) சீன நாட்டை சார்ந்தவர்.... அவர் தனது 13ஆம் வயதில் அதாவது 1973ல் இருந்து கூந்தலை வளர்த்து வருகின்றாராம்...

அவரது கூந்தலின் நீளம் :5.627 m (18 ft 5.54 in) மேல் விவரங்கள் இங்கு காண்க
அவரது புகைப்படம்


காணொளி


மிக நீண்ட கூந்தல் கொண்ட குடும்பத்தினரை தெரியுமா,,,,? சத்தியமா அவர்கள் இந்தியர்கள் அல்ல... லாக்போர்ட் அமரிக்காவை சார்ந்த சதர்லேண்டு சகோதரிகளான சாரா,விக்டோரியா,இசபெல்லா,கிரேஸ்,நவோமி,டோரா கிட்டி,மற்றும்,மேரி ஆகியோர்....அவர்கள் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்கள்..
அவர்களது புகைபடங்கள்... அதிக விவரங்கள்








Sunday, April 13, 2008

என் பார்வையில் மலேசியா...4

மலேசியா வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது,இந்த இரண்டு வருடங்களில் ஓரளவு சுற்றிப்பார்த்து (தெரிந்து)கொண்டுள்ளேன்,மலேசியாவில் நான் பார்த்த ஒரு சில முக்கியமான இடங்கள்...

1.லங்காவி தீவு..
2.கெண்டிங் மலைவாசற்தலம்..
3.கேமரூன் மலைவாசற்தலம்..
4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்..
5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்..
6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்...
7.பிறை பறவைகள் சரணாலயம்..
8.பினாங்கு அதன் சுற்றுப்புறங்கள்..
9.லம்போங் பூஜோங் அருங்காட்சியகம்

மேலும் பார்க்க கூடிய இடங்கள்...


மலாக்கா அதன் சுற்றுப்புறங்கள்,பங்கோர் தீவுகள்..இதில் நான்
ஏற்கனவேஇந்தபதிவில் கேமரூன் பற்றி ஓரளவு எழுதிஉள்ளேன்.. அதில் சற்று விரிவாக இன்று காண்போம்...


View Larger Map

ஈப்போவில் இருந்து புதியதாக துவங்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் நானும் எனது நண்பருமாக முதல் தனி சுற்றுப்பயணம் மலேசியாவில்,அதுவும் முழுக்க முழுக்க பேருந்து பயணம்....
பேருந்து ஈப்போ நிலையத்தில் நிற்கின்ற பொழுது, நான் மட்டும் கீழ் சென்று உணவு வாங்க சென்றேன்.. பேருந்தின் ஓட்டுநர் ஒரு தமிழர் , அவர் என்னை மலேசியர் என்று நினைத்துக்கொண்டார் போல,அய்யா நீ எந்த ஊர் என்றார்,( இங்கு போதுவாக இளைஞர்களை பெரியவர்கள் அன்பாக அய்யா என்றும்,இளைஞிகளை அம்மா,என்றும் அழைப்பர்) நான் பணிபுரியும் ஊரை சொன்னதோடு நான் இந்தியன் என்றும் தெரிவித்துவிட்டேன்,பிறகு ஏன் தைபூசத்திற்கு போகவில்லையா என்றார், நான் சொன்னேன் , என் நண்பன் சித்தப்பாவானதால், அவர் கலந்து கொள்ள இயலாது ,என்பதால் இருவரும் கேமரூன் வர உத்தேசித்தோம் என்றேன் , ஏற்பாடுகளை பற்றிகேட்டார்,ஒன்றும் செய்யவில்லை இனிமேல்தான் என்றோம்,எனவே அவருக்கு தெரிந்த நபரை ஏற்பாடு செய்யட்டுமா,என்றார் சரி என்றோம்,அது போல் அவர் கம்போங் ராஜா (ராஜக்களின் கிராமம்)என்ற ஊரில் ஒரு அந்த கால பென்ஸ் காருடன் (பெரும்பாலும் கேமரூனில் வாடகை ஊர்திகளாக பென்ஸ்)ஒரு ராஜா நின்றிருந்தார்..அவரது பெயர் மட்டும் தான் ராஜா,நாங்க இந்தியர்கள் என்று தெரிந்ததும்,அவர் நோக்கம் பெரும்பாலும் ,பணம் கறப்பதிலே இருந்தது,என்ன செய்வது அவர் தொழில் அப்படி...? அங்கிருந்து எங்களை ப்ரிஞ்சாங் அழைத்துச்சென்றார்,ஆனால் அப்பேருந்து ப்ரிஞ்சாங் வரை செல்லும் என்பதை பிறகு அறிந்து கொண்டேன்,கேமரூனில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள்...1.பட்டாம் பூச்சிகள் பூங்கா,எனக்கு என்னவோ மனம் ஒப்பவில்லை, பட்டாம்பூச்சிகள் ஒருவித சோர்விலே இருந்தன...
அடுத்து காக்டஸ்வேலி(கள்ளிப்பூங்கா) மிக சிறப்பாக பராமரிக்கின்றார்கள்,ஓரளவு பெரிய பூங்கா,அடுத்து ஸ்ட்ராபெரி பழத்தோட்டம், நாங்கள் சின்னசாமி & மகன்கள் அவர்களது தோட்டத்திற்கு சென்றிருந்தோம்,அந்த இடுகை,,அதன் பிறகு போ டீ( BOH TEA)எனப்படும் தேயிலை தோட்டமுடனான தொழிற்சாலைக்கு சென்றிருந்தோம்,உடனடி,பச்சை,மற்றும் ஸ்டிராபெரி,எலுமிச்சை போன்ற சுவைகளில் தேயிலை வைத்திருந்தார்கள், நான் உடனடி மற்றும் எலுமிச்சை குளிர் தேநீர் இரு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்,அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையோர்களில் சொந்த ஊர் நாமக்கல் சுற்றுவட்டாரம் என்று , அந்த தொழிற்சாலையின் சுற்றுலாவழிகாட்டி மலேசிய இந்தியர் கூறினார்,அங்கிருந்து கிளம்பும் போது ,அந்த வாடகை ஊர்திக்கு மணி நேர அடிப்படையில் ,பேசியிருந்த போதும், அவர் எங்கள் அனுமதி இன்றி வெள்ளைகார தம்பதிகளை ஏற்றிகொண்டு வந்து,நீங்க கொஞ்சம் சமாளித்துக்கொள்ள முடியமா என்றார்,நானும் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று ஆங்கிலத்தில்,கூறிவிட்டு அமர்ந்து கொண்டோம்,என்ன செய்வது.?,வெள்ளைக்காரரும் உங்களுக்கு வசதிப்படுமா?என்று கேட்டார்,ஒன்றும் பிரச்சினை இல்லை சொல்லிவிட்டு,பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம்,அவர்கள் இங்கிலாந்து யார்க்சையர் பகுதியை சேர்ந்தவர்கள்,வட இந்திய சுற்றுப்பயணம் முடித்து,அப்படியே மலேசியா , பார்த்து தாய்லாந்து மற்றும் கம்போடியா வழியாக தம் நாடு திரும்பவிருப்பதாக கூறினார், உங்களுக்கு யார்க்சையர் தெரியுமா,,? என்றார், நான் ஓ.. கவுண்டி கிரிக்கெட்டு நடக்குமே என்றேன், நல்லது இந்தியர்கள் பெரும்பாலும் உலக நடப்புகளை தெரிந்துவைத்துள்ளீர்கள் என்றபடி,அந்த ஹர்பஜன் ,ஆண்ரு சிம்மன்ஸ் ப்ரச்சினை என்னவாயிற்று என்றார்,நான் சொன்னேன் ஆஸ்திரேலியர்களுக்கு எப்போதும் தாம் ரொம்ப உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு என்றேன், அவர் சொன்னார் உண்மையில் ஆண்ரு உண்மையான ஆஸ்திரேலியரே அல்ல, அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்று கூறினார்... நான் வேகமாக அவர் ஆஸ்திரேலிய பூர்வ குடி என்று சொல்கிறனரே..என்றேன், இல்லை என் நண்பன் ஒருவனது ஊர்தான் ஆன்ருவின் சொந்த ஊர் என்றார்...அப்போழுது ஓட்டுனர் ராஜா நீங்க இங்கே இறங்கி பக்கத்தில் , ஒரு தமிழ் பள்ளி இருக்கின்றது, பார்த்து கொண்டுஇருங்கள், நான் பத்து நிமிடத்தில் இவர்களல் விட்டு விட்டு வருகிறேன் என்றுகூறினார்,எனவே நாங்கள கீழ் இறங்கி ,அத்தம்பதிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம்...

தொடரும் பக்கங்கள்....

முந்தைய இடுகைகள்
என் பார்வையில் மலேசியா..1,

என் பார்வையில் மலேசியா..2,

என் பார்வையில் மலேசியா..3,

Thursday, April 10, 2008

உலகின் மிகச்சிறிய துப்பாக்கி..... !

உலகின் மிகச்சிறிய கைத்துப்பாக்கி...5.5 செமீ நீளம் கொண்டது...
விலை...ஏறக்குறைய இரண்டரை இலட்சங்கள்...மட்டுமே...
















நன்றி :சுவிஸ்

Tuesday, April 8, 2008

கண்டிப்பாக இந்தியாவில் மட்டும் இவ்வாறு காணலாம்......?





















இணைப்பு
இந்திய சாலை போக்குவரத்து....