Sunday, May 31, 2009

என் மக்களே எழுந்து நில்லுங்கள்!, அருட்தந்தை ஜெகத்கஸ்பர் நக்கீரனில், வரும் தொடர்.....

இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் “”தோல்வியின் பண்பாடு” – Culture of Defeat ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது.

படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: “”உன்னை தோற்கடித்தவனின் இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!”.

நான் பலமுறை பார்த்தும் சலித்துப் போகாத ஆங்கிலத் திரைப்படம் கிளாடியேட்டர் (Gladiator) மகத்தான ராணுவத் தளபதியான மாக்சிமுஸ், சதியால் சந்தையில் அடிமையாக்கப்பட்டு, உரோமாபுரி நகரத்து மக்களின் கேளிக்கைக்காக உயிரை பணயம் வைத்து சண்டையிடும் கிளாடியேட்டர் ஆகி, அப்பேரரசின் மன்ன னுக்கே சவால் விட்ட கதைதான் கிளாடியேட்டர். அப்படத்தின் ஒரு இடத்தில் மாமன்னன் ஜூலியஸ் சீசர் மாக்சிமுஸை தன் போர்க்களக் கூடாரத் திற்கு இரவுப் பொழுதில் அழைப்பார். “”வா… மாக்சிமுஸ் என் காதோடு கதை பேசு… உரோமாபுரி என்றால் என்ன?” என்று கேட்பார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல் திரைப்படத்தின் கதாநாயகன் மாக்சிமுஸ் நிற்பான். அவனை உற்றுப் பார்த்து சீசர் சொல் வார். “”உரோமாபுரி என்பது ஓர் எண்ணம். வனைவு. உயர்ந்தவை என நாம் கனவு கொள்ளும் அனைத்திற்கும் தாய்மடி கிடைக்குமிடம். மாக்சிமுஸ்… உரோமாபுரியின் இன்றைய ஒழுக்கம் அவநம்பிக்கை தருகிறது. இன்னும் ஓர் கடும்பனிக் காலத்தை அது தாக்குப் பிடித்து நிற்குமென நான் நம்பவில்லை. உன் படைகளை தயாராய் வைத்திரு. உரோமாபுரிக்கு நீ தேவை” என்பார் சீசர்.

“”சியர்சியாவின் சிவந்த குன்றுகளிலே அடிமைகளின் பிள்ளைகளும் அடிமைப் படுத்தியவர்களின் பிள்ளைகளும் ஒன்றாகக் கரம் கோர்த்து விளையாடித் திரியும் காலம் வரும் எனக் கனவொன்று வைத்திருக்கிறேன்… I have a dream் என்ற மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் உரையை நாம் மறக்க முடியுமா? அரை நூற்றாண்டிலேயே அவரது அரசியற் பேரன் பராக் ஒபாமா அடிமை வரலாற்றின் பழைய ரத்தக் கறைகளை புதிய கனவுகளால் கழுவிடும் உன்னதத்தினை காண்கிறபேறு நமது கண்களுக்குக் கிடைக்க வில்லையா?

கிளி ஜோசியக்காரர்களை எனக்குப் பிடிக்கும். நேரம் இருந்தால் எங்கு அவர்களை பார்த்தாலும் கையை நீட்டிவிடுவேன். அவர்கள் சொல்லும் எதையுமே நான் நம்புவதுமில்லை, அவர்கள் சொல்லும் எதுவும் நடப்பதுமில்லை. ஆனால், 50 ரூபாய் கொடுத்துவிட்டால் வஞ்சகமின்றி நம்பிக்கை வார்த்தைகளை மடி நிறைய கொட்டிக் கொடுப்பார்கள். நான் கை நீட்டுவதோ அவ் வார்த்தைகளுக்காக அல்ல. அவர்கள் கடைபிடிக்கும் தொழில்நுட்பத்தை ரசிப்பதற் காக. முதலில் ரெண்டும் கெட்டானாகத் தொடங்குவார்கள்… ஆபத்து என்பதுபோல் நடுவழியில் கொக்கி போடுவார்கள்… எல்லாம் சரியாகி பிரமாதமாக இருக்கும் என்ப தாக முடிப்பார்கள். இன்னும் 10 ரூபாய் போட்டுக் கொடுக்கலாம் போல் நமக்கு இருக்கும். நானறியா நாள் முதல் இயற்கை இரகசியமாய் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று நம்பிக்கை வார்த்தைகளுக்கு இருக்கிற உயிர் தரும் ஆற்றல்.

பைபிளில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்து, இப்போதும் மறக்காமல் வைத்திருக்கிற பகுதிகள் எவையென்று கேட்டால் கடவுள் தன் தூதர்கள் வழி, தோல்விகளை மட்டுமே சம்பத்தாய் சுமந்து வந்த தன் யூத மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள்தான். “”என் மக்களே… எழுந்து நில் லுங்கள்… உங்கள் துக்க உடைகளையும் துயரக் கோலத்தையும் தூரப் போடுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமாய் சிதறுண்டு போன என் பிள்ளைகளாகிய உங்களை மீண்டும் நான் கூட்டிச் சேர்ப்பேன்… அடிமைகளாய் சிதறிய உங்களை பெருமையின் ஆடைகள் அணிவித்து உரிமைக் குடிமக்களாய் கூட்டி வருவேன். அந்நாளில் பாலைவனத்தில் லீலி மலர்கள் பூக்கும். பாறைகளினின்று நீரூற்றுகள் புறப்படும்… இவ்வாறு பல நூறு வரிகளை நான் மறவாது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையும் வசீகரமாய் தூவிச் செல்கிற நம்பிக்கை.

எனவே தான் நொறுங்கிப் போய், இருள் கவிந்து, செல்லும் திசை தெரியாது நிற்கும் நமது ஈழத்தின் ரத்த உறவுகளுக்கு நாம் தொடர்ந்து தரவேண்டியது நம்பிக்கை. எப்படி மழையும் பனியும் மண்ணில் விழுந்தபின் தம் பயனைத் தராது திரும்புவதில்லையோ அவ்வாறே நம்பிக்கை வார்த்தைகளும். எல்லா இரவுகளும் விடியும். எல்லா கொடுமைகளும் முடியும். இலையுதிர் காலம் இதுவென்றால் வசந்தம் விரைவில் வருமென்றுதானே அர்த்தம்?

நான் எழுத்தாளன் அல்ல. எழுதிப் பெரிய பழக்கமும் இல்லை. நண்பர் காமராஜ் அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலேயே “மறக்க முடியுமா?’ எழுதத் தலைப்பட்டேன். எழுதத் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீதான இறுதி முற்றுகை தொடங்கியது. அதன்பின் என்னையே நான் ஆற்றுப்படுத்திக் கொள்ளும் களமாகவே தொடர்ந்து எழுதினேன். இக்களம் இல்லாதிருந்தால் ஒருவேளை நானே கூட உடைந்து போயிருப்பேன். நான் எழுதியவை உங்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் தந்ததென்பது எனக்குத் தெரியாது… ஆனால் நான் தகர்ந்து போய்விடாமல் தாங்கியது இந்த எழுத்து வடிகால்தான். எழுத்தின் வல்லமையை நீண்ட நாட்களுக்குப் பின் உணர உதவிய நக்கீரனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

கடந்த இதழ் படித்துவிட்டு “”எல்லாம்தான் முடிந்து போயிற்றே… இனியும் அவை பற்றி ஏன் எழுதிக் கிளற வேண்டும்… ஆட்சியில் இருப்போரிடமுள்ள தொடர்பு களை பழுது செய்யாமல் மக்களுக்கு இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யலாமே…” என்று அக்கறை யுடன் அறிவுரை சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் முதலில் சொன்னது, “சரியாக முடியாதவரை எதையுமே முடிந்துவிட்டதாகக் கருத முடியாது’. Nothing is settled until settled right. மீண்டும் நாம் அனைவருமாய் சொல்வோம், சரியாக முடியாதவரை எதுவும் முடிந்ததாகக் கருதப்பட முடியாது.

முக்கியமாக காழ்ப்புணர்வும் பகைமிகு தன்மையுமின்றி இதய நேர்மையுடன் முன்வைக்கப் படும் உண்மைகள், உறவுகளையும், பரஸ்பர மதிப்பினையும் வலுப்படுத்துமென்பதே எனது ஜனநாயக அனுபவமும், நம்பிக்கையும். நானொன்றும் கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குருவானவர் அல்ல. கொஞ்சம் விட்டேத்திதான். என்னிடத்தில் குறைகளும் பல உண்டு. எனினும் சுயநலனுக்காய் பொய்கள் சொன்னதாய் நினைவில்லை. அதுவும் மனித உயிர்கள் சம்பந்தப்படுகையில் உண்மை சொல்லத் தயங்குவதுபோல் பாவம் வேறெதுவுமில்லை.

உண்மைக்கு உள்ள பிறிதொரு குணாதிசயம் விடாப்பிடித்தன்மை. பொதுவாக நீங்கள் பார்த்தீர்களென்றால், பொய் காற்று வேகத்தில் பரவும். எல்லா இடத்திலும் முதல் ஆளாய் போய் நிற்கும். ஆனால் உண்மை, ஆமை போல. உருண்டு, புரண்டு, விழுந்து, எழுந்து, சிராய்ப்புகள் பட்டு, களைத்துப் போய் -ஆனால் வந்து சேரும். காலதாமதம் ஆகுமே தவிர, உண்மை நிச்சயம் வந்து சேரும்.

இதனை நான் இங்கு குறிப்பிட தனிப்பட்ட காரணமும் உண்டு. “சென்னை சங்கமம்’ தொடர்பானது அது.

2007 பெப்ருவரியில் முதல் “சென்னை சங்கமம்’ நிகழ்ந்தது. தமிழக கலை-பண்பாட்டுக் களத்தில் தீர்க்கமான தாக்கங்களை உருவாக்கி தொடரும் “சென்னை சங்கமம்’ அறிமுகமான கதை மிகவும் எளிமையானது. மயிலாப்பூர் லஸ் கோயில் சாலையிலுள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் கனிமொழி அவர்களோடான உரை யாடலில் பிறந்ததுதான் சென்னை சங்கமம். சென்னை நகர் கொண்டாடும் ஒரு பண்டிகை கூட தமிழர் பண்பாட்டு வரலாற்றை சார்ந்ததாக இல்லையே என்ற ஆதங்கத்தை அளவளாவி, ஏதேனும் செய்ய வேண்டுமெனப் பேசி, கிராமியக் கலைகளை மையப்படுத்தும் சிறியதோர் கலைவிழாவினை தை பொங்கல் காலத்தில் அமைக்கலாம் என முடி வெடுத்தோம்.

மிகச்சிறிய, ஆனால் செறிவான கலைவிழா எண்ணத்தை பூங்காக்கள், வீதிகளெங்கும் தமிழ் கலைகளின் மலர்ச்சியாய் விரிய வைக்கும் எண்ணம் தந்தது. சென்னை சங்கமம் போல் பெங்களூரில் “”பெங்களூரு ஹப்பா” நடத்தி வரும் குழுவினர். பெங்களூரில் நடத்துவது போல சென்னையிலும் நடத்தவேண்டுமென அவர்கள் வந்தி ருந்தார்கள். பல சுற்று விவாதங்கள் அவர்களோடு நடந்தன.

ஆனால் அவர்கள் பணம் செய்வதில் அதிக குறியாய் இருந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டதால் நாமே எல்லாம் செய்யலாம் என்று முடிவெடுத் தோம். அத்தெளிவான முடிவுக்கு காரணமாயிருந்தவர்களில் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு அவர்களும் ஓவியர் மருது அவர்களும் முக்கியமான வர்கள். உண்மையில் “சென்னை சங்கமம்’ என்று பெயர் சூட்டியது இறையன்பு அவர்கள். நீங்காது பதிந்துவிட்ட இளங்கன்று முகத்தினை முத்திரையாய் வரைந்தவர் மருது அவர்கள். இன்று சென்னை சங்கமம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கலை-பண்பாட்டு விழாவாக வளர்ந்து நிற்கிறது. ஈராயிரம் கலைஞர்கள், இருபது அரங்குகள், லட்சக்கணக்கான மக்கள் என பிரம்மாண்டமான இந்நிகழ்வை நிர் வகிக்கும் அனுபவங்களை எழுதவே ஏழெட்டு “மறக்க முடியுமா?’ களங்கள் தேவைப்படும். அது இப்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்பாராத பெருவெற்றியோடு நின்ற முதல் சங்கமத் திற்குப் பின் நடந்த சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்

Wednesday, May 20, 2009

தலைவன் இருக்கின்றான்.... தமிழ் ஈழம் மலரும்.... இலங்கையில் டி . என் . ஏ. பரிசோதனை செய்யும் வசதியில்லை.. செய்தி

சென்னை: இலங்கையில் மரபணுச் சோதனை எனப்படும் டிஎன்ஏ டெஸ்ட்டிங் மற்றும் மேப்பிங் செய்வதற்காக அடிப்படை வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை என இந்திய தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் பி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.



டாக்டர் சந்திரசேகரன் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் துறை இயக்குநராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ[^] விசாரணைக்கு பேருதவியாக இருந்தவர். இவர் தான் சிதைந்து போன தணு, சிவராசன் ஆகியோரின் உடல்களை அடையாளம் காண உதவினார்.

இந் நிலையில் பிரபாகரன் இறந்ததாக ராணுவம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துவிட்டதாகவும், அவரது மகன் சார்லஸ் ஆண்டனியின் டிஎன்ஏ சோதனையும் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளது இலங்கை ராணுவம்.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள சந்திரசேகரனை தட்ஸ்தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவரது பேட்டி:

கேள்வி: உடனடி டிஎன்ஏ சோதனை செய்வதற்கான நவீன வசதிகள் இலங்கையில் உள்ளதா?

பதில்: எனக்குத் தெரிந்து 2008 வரை அங்கே அப்படிப்பட்ட வசதிகள் இருந்ததாக நினைவில்ல்லை. இலங்கை நீதிபதிகள் சமீபத்தில் பெங்களூர் வந்திருந்தனர். அவர்களுக்கு நாங்கள்தான் தடயவியல் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் குறித்த பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தோம். அதன்பிறகு அங்கே டிஎன்ஏ சோதனைக்கான வசதிகள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை.

அப்படியே இருந்தாலும், இரண்டு மணி நேரத்திலெல்லாம் டிஎன்ஏ சோதனையை நடத்தி முடிப்பதாகச் சொல்வதென்றால்... என்ன விளையாடுகிறார்களா!. இதென்ன ரத்த, சிறுநீர்ப் பரிசோதனையா...!. பிரபாகரன் உடல் என்று கண்டெடுத்ததாக இவர்கள் காட்டுவது வடக்கு இலங்கையில். கொழும்பிலிருந்து ஃபோரன்ஸிக் லேப்பை அங்கே நகர்த்திக் கொண்டு போய் டெஸ்ட் செய்தோம் என்று சொல்ல வருகிறார்களா...!!.

அடுத்து, டிஎன்ஏ டெஸ்ட் என்பதே லேசுபட்ட காரியமல்ல. இறந்த ஒருவரது ரத்தத்திலிருந்து டிஎன்ஏ பார்க்க முடியாது. உடலின் திசுக்களை எடுத்து தான் சோதிக்க வேண்டும். அதன் பிறகும் கூட நேரடியான முடிவுகள் கிடைக்காது. 'நான்தான் பிரபாகரன்' மரபணு என்று வந்து அது சொல்லிவிடாது. ஒரு பார்கோட் (bar code) மாதிரிதான் உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும். இந்த ரிசல்டை வைத்தும் பிரபாகரன் மரபணு இதுதான் என்றும் கூற முடியாது. அதனுடன் ஒப்பிட, பிரபாகரன் உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள, திசுக்களில் பெறப்பட்ட டிஎன்ஏ சோதனை முடிவுகள் இருக்க வேண்டும்.

இலங்கையிடம் அப்படி ஏதாவது இருக்கிறதா... பிரபாகரன் உயிருடன் இருந்தபோது ராணுவத்தினர் அவரிடம் இருந்து ரத்த, திசு மாதிரிகளை வாங்கி வைத்திருக்கிறார்களா?...

கேள்வி: சார்லஸ் மற்றும் பிரபாகரன் மரபணுக்கள் ஒத்துப் போவதாகச் சொல்கிறார்களே?

பதில்: பிரபாகரன் மகன் சார்லஸ் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு நாள் கழித்தே பிரபாகரன் உடலைக் காட்டினார்கள். இதில் டிஎன்ஏ சோதனை நடத்துவது எப்படி சாத்தியம்?. முட்டாள்தனமான வாதம் இது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்க முயலும் இலங்கை ராணுவம் அதற்காக விஞ்ஞானப்பூர்வ வழிகளை கேலிக்குள்ளாக்குவது போல் பேசி வருவதாகவே எனக்குப் படுகிறது.

கேள்வி: ராணுவம் காட்டியிருப்பது பிரபாகரன் உடல் இல்லை என்று கூறப்படுகிறதே...

பதில்: இதில் சந்தேகங்கள் வருவது இயல்புதான். காரணம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது உண்மையென்றால் அதற்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர் சயனைடு சாப்பிட்டு இறந்திருக்க வேண்டும். அப்படியென்றால் அதனால் ஏற்பட்ட அறிகுறிகள் காயங்கள் வாய், நாக்கு, முகத்தில் இருந்திருக்கும். ராணுவம் காட்டிய படத்தில் அப்படி எதுவுமே இல்லை.

அடுத்து பிரபாகரன் எப்போதும் பிஸ்டல் வைத்திருப்பவர். தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்றால், அதற்கான சரியான காயங்கள் இருக்க வேண்டும். தலைப் பகுதியில் சுட்டுக் கொண்டிருந்தால் முழுமையாக உருமாறியிருந்திருக்கும். அதற்கும் வாய்ப்பில்லை.

மூன்றாவது சாத்தியம், ராணுவத்தால் சுடப்பட்டு இறந்திருக்கலாம். ராணுவம் அப்படித்தான் கூறுகிறது. டபுள் பேரல் கன் மூலம் சுட்டுக் கொன்றதாக சொல்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால் தலைப்பகுதி மட்டும் காயமடைந்தும், மற்ற பகுதிகளில் சின்ன சுருக்கமோ, கரும் திட்டுக்களோ கூட இல்லாமல் இத்தனை தெளிவாக இருக்கவும் வாய்ப்பே இல்லை.

சுட்டபோது பாதி தலை கழண்டு விடும், ஆனால் முகம் அப்படியே இருக்கும் என்பதை யாராவது நம்புவார்களா...

ஏற்கனவே இறந்தவரை சுட்டிருக்கலாம்...:

நான்காவது சாத்தியக்கூறு ஒன்றும் உள்ளது... அதாவது, ஏற்கெனவே இறந்துவிட்ட உடலில் சுட்டுவிடடு, தாங்கள் கொன்றுவிட்டதாகக் கூறுவது. ராணுவம்[^] அதைத்தான் செய்கிறதா என்று தெரியவில்லை.

கேள்வி: கருணா, தயா போன்றவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்களே...?

பதில்: அது ஒரு சடங்கு. இறந்தவர் உடலை அவருக்குத் தெரிந்தவர்களை வைத்து அடையாளம் காட்டுவது ஒரு நடைமுறை. ஆனால் அதற்கு பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்டதன் உடைகளைக் களைந்து சேறு பூசி காட்ட வேண்டிய அவசியமென்ன... பிரபாகரன் உடலில் உள்ள மச்சங்கள் அவர் மனைவிக்குத்தான் தெரியும். கருணாவுக்கும் தயாவுக்கும் என்ன தெரியும் என்று நிர்வாணப்படுத்திக் காட்டுகிறார்கள்?. இது முழுக்க முழுக்க நாகரிகமற்ற, அபத்தமான செயல்.

கேள்வி: பிரபாகரன் உடலை என்ன செய்வார்கள்?

பதில்: பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதத்தை விடுத்துப் பாருங்கள். 30 ஆண்டுகள் உலகின் கவனத்தைத் தன் மீது திருப்பி வைத்திருந்தவர் பிரபாகரன். அவரது உடல் என்று ஒன்றைக் காட்டும் ராணுவத்தினருக்கு, அது பிரபாகரனுடையதுதான் என்பதை அழுத்தமாக நிரூபித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது.

அதிலும், ஜனநாயக நாடு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் நாடு என இலங்கையை அறிவித்துள்ள ராஜபக்சே, பிரபாகரன் மரணத்தை உரிய விஞ்ஞான முறைப்படி உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்து அவரது உடலை அப்படியே பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினர் அந்த உடலை எப்போது கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு இலங்கைக்கு உள்ளது. போரில் பிடிபட்ட பிணங்களைக் கூட சர்வதேச சட்டப்படி அவர்களது குடும்பத்தினர் இறுதிக் கடன் செய்ய வசதியாக ஒப்படைக்க வேண்டும்.

எனவே பிரபாகரன் உடல் என்று இவர்கள் காட்டுவதை, அந்த மரணம்[^] உறுதியாகும் வரை வைத்திருந்து பின்னர், அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் பேராசிரியர் சந்திரசேகரன்.

சென்னையில் டிஎன்ஏ சோதனை நடத்த திட்டம்?:

இந் நிலையில் அது பிரபாகரன்[^] உடல்தானா என்பதை உறுதி செய்ய சென்னையில் டிஎன்ஏ சோதனை செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
Thanks to Thatstamil

Thursday, May 7, 2009

இலங்கையில் போர் நடக்கவில்லை - ஆதாரபூர்வமான தகவல்......

இன்று காலை கிடைத்த... இங்கு கிடைத்த தகவல்களின் படி..... இலங்கையில் போர் நடக்கவில்லை ...ஆமாம்... பண்டைய நாள்களில் கூட போர் நிகழ்ந்தால் , போது மக்கள்... அதிலும் பெண்கள், குழந்தைகள் , முதியோர்கள் மீது தாக்குதல்... நிகழ்த்தபட்டதாக ,வரலாறு இல்லை...




அப்படியென்றால் இலங்கையில் நிகழ்வது போரில்லை,



இது இன ஒழிப்பு...தமிழின ஒழிப்பு....


இதயம் கனக்கிறது....! இமைகள் அழுகின்றன...1
நா துடிக்கிறது...! நாதியற்று போனானோ என் தமிழன்...


இறைவா...?

நீ எங்கும் இருக்கின்றாய் என்றால்...! அங்கும் இருப்பாய் என்றால்..!

இவை கண்டாயொ...? , இல்லை உன் கண்கள் குருடோ..!

அழுகுரல் கேட்கவில்லையா..? நீ என்ன செவிடா...?

ஆறுதல் அளிக்க ... யாருமில்லா அனாதையா...? தமிழன்...?


இல்லை , இங்கு நீ இல்லை ... நீ இல்லை என்றால் என்ன?

அங்கு இருக்கின்றார்கள்..! ஆம் நல் உள்ளம் கொண்ட மனிதர்கள் உலகில் இருக்கின்றார்கள்...!

இவை கண்டு ... நம் ஈழ தாய்,தந்தை,சகோதர,சகோதரிகளுக்காக...அவர்கள் துயர் நீங்க,தனி ஈழம் பிறக்க... ஒரு நிமிடம் பிராத்தியுங்கள்... நண்பரே....

க இரா.செந்தில் நாதன்