Sunday, March 28, 2010

என் இதயம் துளைத்த......!


ரொம்ப நாளா பதிவு எழுத.........
எழுத நினைச்சேன் முடியல.......!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் ,இப்ப எழுதறேன்...!அதுவும் பர்சனலான விசயம்,
காதலிமட்டுமல்ல,காதலும் என்ன வெறுக்குதோன்னு நினைக்கிற அளவு...!
விரக்தியின் எல்லை ////// என்ன ..... கழுதை கெட்டா குட்டிசெவறு...!
மனிசன் கெட்டா... டாஸ்மார்க் பாரு,,,,
**********************************************************************************
காதலிச்சா மட்டும் தான் காதல் வருமா என்ன...
ஒரு சாம்பிள்

சூரிய விரோதம்

கருந்தோல்
வெயில் அங்கி

உடல் கன்றிச் சிவந்து
ஒளி குடிக்கும் தாவரம்

சிறு களைகொத்தியுடன்
தன் நிலம் திருத்தித் தவழும்

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வம்
என் அன்னை

பனை தாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த
வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுஞ் சூரியன்

கைக்குக் கிடைப்பானெனில்
இவ் அரிவாளால்
வெட்டித் தரிப்பேன்
ஒரு சுள்ளி போலே

*******************************************************************************************
வற்றிய குளத்தின்
களிமண் சகதியில்
துள்ளித் துள்ளி விழுவது
மீனின் துடிப்பா
குளத்தின் துடிப்பா?

இதை எழுதியது நான் இல்லைங்.... அவரை அறிமுகப்படுத்து அளவுக்கு நான் உயரவில்லை எனினும்...நட்பின் பொருட்டு நவிழ்தல் ,

அவர்தான்



இவர் தான் இமயங்கள் இணையும் ரெட்டசுழி படத்தின் துவக்க பாடலானபட்டாளம் பாருடா எனும் பாடலை எழுதி உள்ளார்.... பொதுவாக தமிழ் திரைப்படங்களில் சிறுவர்களுக்கான விடயங்கள் மிக குறைவு... ஆனால் வெயில் ,பசங்க படங்கள் விதிவிலக்கானவை.. இந்த பாடலை கேட்டும் போது திரையாக்கம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகிறது...
மற்றுமொரு சிறுவர்..கொண்டாட்டத்திற்கான , அழகான பாடல்...
கேட்கையில் வேறோரு உலகில் நான் பயணிப்பதை போல் உணர்கிறேன்,இசை (piper ) போல ஒருவகையான் மேறகத்திய சாயலை கொண்டுள்ளது...
கார்த்திக் ராஜாவின் உழைப்பு .... வீண்போகவில்லை... ராகாவில் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் உள்ளது.....
நம் பக்கத்தில் இருந்து மேலும் ஒருவர்...மிக்க மகிழ்ச்சியாக உள்ளது....!
மிக எளிமையான..மனிதர்...அவர்தம் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற
அருட் பேராற்றல் , அருள் புரியட்டும்...!

*******************************************************
வர்ணங்கள் , ஓவியங்கள் வரைவதில் நாட்டம் உண்டெனில் இது உங்களுக்கு உதவும்.....

இது ஒரு புது உலகை உங்களுக்கு ஏற்படுத்தும்....

Twitter, petre,Flame





நம்ம அனைத்து சொந்தங்களுக்கும்....வருகிற 22-03-10, அன்று அருள்மிகு கொண்டாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ,நீர் மோர் மற்றும் பானக்கம் ,ஊற்றுவதால், தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
கேட்டுகொள்கிறேன்...


service our motto