Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, August 19, 2010

யார் இந்த உமாசங்கர்...?

ஒரு நோபால் வீசியதற்கு கோபப்படும் நாம்... !இங்கு .....................?



"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இங்கே கையெழுத்து இடலாம்.. வாருங்கள் நண்பர்களே.. பதிவர்கள் ஒன்றிணைந்து இதை சாதித்துக் காட்டுவோம்.

நன்றி :தருமி ஐயாவுக்கு
கார்த்திகைபாண்டியன்

Monday, July 5, 2010

பாரத் பந்த்...?தேவையா..?


சேது சமுத்திர திட்டம்... சுற்றுப்புற சூழலை , சிறிது பாதித்தாலும்,பொதுவான பல பயன் கொண்டு ,( வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றம் ) பெரும்பான்மையோர் வரவேற்கின்றனர்.... நானும் கூட... செய்தி
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ,மற்றும் ஜூ வி....
சேது பாலத்தின் திட்ட மதிப்பு..2004 ஆம் வருடம்.. ரூபாய் 2400 கோடி... 2005 இல் திட்டம் துவங்கும் போது ( மணல் அள்ள ஆரம்பித்த பொழுது) , ஏறக்குறைய திட்ட மதிப்பு.. ரூபாய் 3500 கோடி , ஆனால் தட்போதைய நிலவரப்படி ரூபாய் 4000 கோடிகள் வரை , இத் திட்டத்தை முடிக்க தேவைப்படலாம்... ஆக பற்றாக்குறை... 1500 கோடிகள்....( அரசியல் வியாதிகளுக்கு ரொம்ப கம்மித்ான்) இதை எவ்வாறு ஈடு செய்வர்......( எல்லாம் நாம் வரி பணம் தாங்க) ? இந்நிலையில்... 01-10-07
அன்று தமிழக அரசு ,பொதுவேலை நிறுத்த, அழைப்பு அறிவிக்கின்றது... நல்ல வேளையாக நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது , நாட்டில் இன்றும் நீதி மன்றங்கள் , முறையாக , செயல்படுகின்றன என்பதை சுட்டியும் காட்டின... ஆனாலும் போது வேலைனிறுத்தத்ிக்கு பதில் உண்ணாவிரதம் ...என்று ஆனது... நடந்தது சற்று ஏறக்குறைய , வேலை நிறுத்தம் தான்... இதன் விளைவுகளை பார்ப்போம்.... முதலில் பொருளாதார ரீதியாக பார்ப்போம்... முதலில் கோவை மாவட்டம் திருப்பூர், சுமார் ரூபாய் 50000 கோடி வருட வியாபாரத்தில் ,ஒரு நாளைய இழப்பு சுமார் 100 கோடி,(ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu) அடுத்து கரூர் சுமார் 13500 கோடி வருட வியாபாரத்தில் , ஒரு நாளைய இழப்பு 36 கோடி... இப்படி 29 மாவட்டங்களில் சுமாராக சுமாராக சொன்னாலே... இப்படி
இது போக சுமாராக 62400000 பேர் கடைசி கணக்கு எடுப்பின் படி , இதில் குழந்தைகள், முதியவர்கள் , ஊனமுற்றோர் , மற்றும் நம்ம அரசியல்வாதிகளையும் கணக்கில் விட்டுவிட்டு( ஏன் என்றாள் அவர்கள் நாடு முன்னேற , கால, நேர , பாகுபாடு இன்றி தொண்டு செய்பவர்கள்) பாதி பேரை, கணக்கில் எடுத்துக்கொள்வோம்... சுமார் 30000000 மக்கள் உடைய மனித மணி நேரங்கள் ..... வீணடிக்கப்பட்டன.... இது சற்று ஏறக்குறையமலேய்சியாவின் மொத்த மக்களின் உழைப்புக்கு ஈடாகும்... ஜப்பானின் அரை பங்கு மக்களின் உழைப்பிட்கு ஈடாகும்....


இப்படியே நாம் பயணித்தால் ...விரைவில்....இந்தியா முன்னேறி விடும்..2020 இலக்கை அடைந்து விடலாம்....

அன்புடன்
கரா. செந்தில் நாதன்

Wednesday, August 6, 2008

என் முதல் பதிவு... இந்தியாவிலிருந்து....

இரண்டரை வருட வெளி நாட்டு வாழ்க்கை முடிந்து, இந்தியா வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது...




இரண்டரை வருடமாக பிரிந்திருந்த,நண்பர்கள்,சொந்தம்,மரம், செடி ,கொடி, எல்லாதையும் பார்த்தாச்சு, ...



பயணம் முடிவான பொழுதே, கட்டாயமாக போக வேண்டும் என்று முடிவு செய்துதான் , வந்தேன், அது போல் 3 பவுணர்மிகளுக்கு ,சென்றும் வந்துவிட்டேன்...விரைவில்..அது குறித்து எழுத எண்ணம்.....சித்தர் பூமி சதுரகிரி....வெகுவிரைவில்...

க இரா.செந்தில் நாதன்...

Tuesday, April 8, 2008

கண்டிப்பாக இந்தியாவில் மட்டும் இவ்வாறு காணலாம்......?





















இணைப்பு
இந்திய சாலை போக்குவரத்து....

Wednesday, April 2, 2008

ஏன் இந்தியா இப்படி....? மட்டைப்பந்தாட்டம்....

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆமதாபாதில் நடந்து கொண்டு இருக்கின்றது....

இது வேகப்பந்தாளர்களுக்கு உகந்த மைதானமாக கருதப்படுகின்றது..முதன் முறையாக இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்து உள்ளது குறிப்பிடதக்கது....

அதன் விபரம்....
ஆமதாபாத் : இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில்பேட்டிங் ‌செய்ய முடிவு செய்தது. தற்போது பேட்டிங் செய்யும் இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜாபர் 9 ரன்; சேவாக் 6 ரன்; லட்சுமண் 3 ரன் எடுத்தும் கங்குலி ரன் ஏதும் எடுக்கவில்லை...

ரன்கள் விக்கெட்
56 /8

76/9

Tuesday, March 4, 2008

பர பரப்பான இரண்டாவது இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது, தொடரை கைப்பற்றியது..!

ஆஸ்திரேலியாவுடனான...இரண்டாவது ஆட்டத்தில்,இந்தியா டாஸ் வென்று முதலில் இந்தியா பேட்டிங் செய்து, அபாரமாக ஆடி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பில் 258 ரன்கள் எடுத்தது..

சச்சின் டெண்டுல்கர் மிக சிறப்பாக 121 பந்துகளில் 98 ரன்களும்,யுவராஜ்38 பந்துகளில் 38 ரன்களும், தோனி 37 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்...

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா... அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து....49.4 ஓவர்களில்...249 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் பரிதாபமாக...தோற்றது....

சிறப்பாக பந்து வீசி , வெற்றிக்கு வழி வகுத்த பிரவீன் குமார் ஆட்ட நாயகனாக தேர்தெடுக்கப்பட்டார்....

தொடர் நாயகனாக நாதன் பிரெக்கன் தேர்ந்தேடுக்கப்பட்டார்..

இந்த தொடரோடு ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வு பெறுகிறார்..

வாழ்த்துக்கள் இந்தியா...

விபரம் காண..
இங்கு பார்க்க

இந்தியா ,ஆஸ்திரேலியா இரண்டாவது இறுதி ஆட்ட விபரம், நேரொளி&ஒலி

ஆஸ்திரேலியாவுடனான...இரண்டாவது ஆட்டத்தில்,இந்தியா டாஸ் வென்று முதலில் இந்தியா பேட்டிங் செய்து, அபாரமாக ஆடி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பில் 258 ரன்கள் எடுத்தது..

சச்சின் டெண்டுல்கர் மிக சிறப்பாக 121 பந்துகளில் 98 ரன்களும்,யுவராஜ்38 பந்துகளில் 38 ரன்களும், தோனி 37 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்...

தற்பொழுது ஆடி வரும் ஆஸ்திரேலியா...

6/199 42 ஓவர்கள்



இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்....

இலவசமாக நேரொலி& ஒளி காண...

இங்கு தறவிறக்க்ம் செய்து .... பின்னர் இங்கு செல்லவும்... IE பயன்படுத்தவும்..

புதிய நிலவரம்...
1.211/6 44 ஓவர்கள்....

2.226/6 46 ஓவர்கள்...24 பந்துகளில் 33 ரன்கள்

3.237/7 ஓவர்கள்48, 3 விக்கெட்டுகள் தேவை நமக்கு

4. 246/8 49 ஓவர்கள், 2 விக்கெட்டுகள் தேவை நமக்கு இந்தியா 258/10 50 ஓவர்கள்..

Sunday, December 30, 2007

எழு...! இந்தியா ...! எழு....!


மங்களம் பொங்க , துன்பங்கள் விலகி ,இனி வரும் புத்தாண்டு அமைய,எல்லாம் வல்ல அருபேராற்றல்...அருள்புரியட்டும்.....
இனி ஒலி& ஒளி உங்களுக்காக...
ஒரு தலைவன் உருவாகின்றான்,



ஏ.ஆர் .ரகுமான்



சங்கர் ஹசான் லாய்





அமிதாப்..



Saturday, December 29, 2007

இந்தியா வல்லரசு ஆகுமா ?-1



அனைவருக்கும் நன்றிகள், இந்தியா வல்லரசாகுமா...? என்றால்

இந்தியா இப்பவே வல்லரசு நாடு தானையா !
என்று சொல்கின்றீர்.... ஒரு வகையில் , சந்தோசம் , ஒரு வகையில் வேதனை...?
உண்மைக்கு எளிமையே போதும். புள்ளி விவர பக்கங்கள்
தேவையில்லை...
ஆம் தேவை இல்லை , கேட்டு , கேட்டு புள்ளி விவரங்கள் நமக்கு புளித்து விட்டனவோ என்னவோ...
ஆனால் புள்ளி விவரங்களே நாட்டின் உண்மையான நிலவரங்களை கூறும்,
நமக்கென்ன நம் வீட்டில் உலை கொதிக்கின்றது , அது போதும் என்ற மனப்பான்மை...
பக்கத்துவீட்டில் , குண்டு வெடித்தால் கூட நம் வீட்டு சுவரிற்கு பாதிபில்லை , என்றால் சரி..
ஏன் ..? முன் பின் அறிமுகம் , இல்லாதவர் கூட பரவாஇல்லை, உறவிற்கு கூட மதிப்பில்லை..
அண்ணன் , தம்பிக்கு கூட உதவுவதில்லை ,இப்படியெ வாழ்ந்து பழகிவிட்டோம் , இப்படியே போனால் கணவன் ,மனைவி , உறவு கூட அமேரிக்காவை போல் மாறலாம், ஒரு நாள் கணவன் , அல்லது ஒரு நாள் மனைவி....

அமேரிக்க அதிபரின் செல்ல நாயின் பெயர்....... ?

மனிதம் , மறைந்து கொண்டு இருக்கின்றது , நாமோ குளு குளு அறையில் அமர்ந்து , கூழுக்கு இல்லாதவன் பற்றி பேசி , பேசி மாள்கின்றோம்...


ஒரு நாளில் இந்தியாவில் ஒரு வேளை உணவு இல்லாமல் , இறக்கும் இந்தியன் இன்னும் 7000.00 பேர், ஆனால் நாமோ உண்டு கொழுத்து , கொழுத்ததை கரைக்க, கடல் கரையில் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்...

என்ன விந்தய் , நான் ஒன்றும் அனைவரும் பட்டினி கிடக்க வேண்டும் என்று கூறவில்லை , நம் பகட்டை குறைத்து , பாசத்தையும் , நேசத்தையும் பெருக்கி , நம்மால் இயன்ற ஒரு வேளை , அல்லது , ஒரு கவளம் உணவோ, பணமோ , பொருளோ , பிறருக்கு கொடுத்து உதவலாம்....

கணினி வழி அன்னதானம்

சுகாதாரத்தில் சமீபத்தில் இந்திய புள்ளி விவரங்களைப் பாருங்கள்.


Align Center
1. பேறு காலத்தில் இரத்தசோகை (Anemia) யால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா (88% விழுக்காடு).

ஏன் என்று கேள்வி எழுப்பினால், 88% விழுக்காடு பெண்களும் , ஏழைகளா ..? இல்லை நாகரீக மோகம் , இளநீரும் , பழரசமும் பருகியவர்கள் , பெப்சி , கோலா குடிக்கின்றார்கள் , அடை தோசை , கேழ்வரகு தோசை போய்...பான் பீசா , பர்கர் என்று உண்பதால் ,


2. ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 80% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் (எத்தியோபியா, சோமாளியாவில் கூட இது 36%தான்.)( கேவலம்)

ஆக எத்தியோப்பியாவும் , சோமாலியாவும் , கூட ஆரோக்கியம் அற்ற வல்லரசுகள்...?
நாகரீக மோகத்தின் உச்சம் இதுதான்... இளம் தளிர்களும் விதி விதிவிலக்கா என்ன ?
வருங்கால இந்தியா , வளமாக இருக்கும்...?

3. பெரியவர்களிடத்தும் சத்துக்குறைவு பாதிப்பு 40%_ல் உள்ளது.

இவர்கள் பாவம் , ஓடி , ஆடி , முடங்கி கிடப்பவர்கள் , ஒரு காலத்தில் தம் உயிர் கொடுத்து நம் இன்னுயிர் வளர்த்தவர்கள் , இவர்களை கவனிக்க நமக்கு நேரம் ஏது , நாமே வெந்ததையும் , வேகாததையும் தின்று அலைகின்றோம்,

4. மூன்று வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 50% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். (இதைச் சொல்லும் பத்திரிகைகள் அது அடித்தட்டு / தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடம்தான் அதிகம் இருப்பதைச் சொல்லாமல் விடுவது எதனால்?)

, எப்போ பார் , அடித்தட்டு , தாழ்த்தப்பட்ட் சாதினு , சொல்றேள்..., அவங்கிட்ட 1 கோடி கொடுத்து பாருங்க , அப்ப அவங்களும் உயர்சாதி , உயர்சாதிதான் , சுரண்டனும் , சுரண்டனும் , மூட்டை தூக்கி , கல் உடைத்து , சாக்கடை , மலம் , அள்ளி இப்படி திருட்டு தனமா சம்பாதிக்கின்ற மக்களிடம் இருந்தும் ,

நேர்மையா மக்களின் வரிப்பணத்தில் , உழைப்பை உருஞ்சும் உயர்ந்தவங்க உயர்சாதின்னா என்ன செய்வது...

5. இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். அதில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர்தான் அதிகம்.

எப்படிங்க அதிகம் தருவார்கள், அவர்கள் உயர்ந்துவிட்டால் , இவனுகளுக்கு உழைபதற்கு , உருஞ்சுவதற்கு ஆள் வேண்டுமே...

முதலாளி பெரிய முதலாளியாக , வாழ்ந்து , சமூக செம்மலாகிச்சாகின்றான், தொழிலாளியோ , தொழிலாளியாகவே வாழ்ந்து மடிகின்றான்...

ஏன் இந்த சமூக அவலம் , சமூக ஏற்ற தாழ்வு,...?

தனிமனிதர்களுடைய



1.சுய நலம் , தான் , தன் குடும்பம் வாழ யாரையும் , கெடுக்கலாம் என்ற எண்ணம்,



2.தனிமனித ஒழுக்கம் இன்மை , அவன் வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள், இங்கு தலைவராகிறாகள்,அவனையும் நாய் போல்
பின்பற்று கிறார்கள், இங்கு ஒழுக்கம் என்பது யாதெனில்... நேரம் தவறாமை , போன்றவை அல்ல..
உண்மையாய் இருத்தல் ,முதலில் தன் மனசாட்சிக்கு ( அப்படின்னா..?) உண்மையானவனாய் இருத்தலும் ,தம் சுற்றம், குடும்பம் , நண்பன்..ஆகியோர்கள் இடத்திலும் , உண்மையை , சொல் , செயலிலும் நிலை நிறுத்துதல்...

இல்லையேல் தனிமனித ஒழுக்கமின்மை சமுதாய சீர்கெடுகலிலேமுடியும்..

உதாரணமாக கணவன் , மனைவியிடமும் , மனைவி கணவனிடமும் உண்மையாய் இல்லாவிட்டால் , முதலில் குடும்பமும் , அதன் தொடர்வாக சமுதாயமும் , அவர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட ஆளில்லாமல் எதிர்கால சமுதாயமும் கெடும்...




3.பேராசை
எல்லாம் இருக்கும் அவனிடம் , அவனோ ஒன்றுமே இல்லை என்றால் தன்னடக்கம்,... எல்லாம் வைத்துக்கொண்டு , இன்னும் அலைவதே பேராசை..
பேராசை பிடித்த செல்வச்சீமான்களே உணருங்கள்...




4. புகழ்
இந்தப்போதை ஏறிவிட்டால் , பிணமும் கூத்தாடும் ,இது முதலில் மனிதனிற்கு அடிமை , பின்னர் அவனை அடிமை யாக்கும்...
இந்த போதையிலே மூழ்கி மூச்சிழந்தவர் ஏராளம்... மூழ்கடிக்கப்பட்டவர்களும் ஏராளம்...

ஆட்சியாளர்களின் அவலம்..
கஞ்சிக்கு வழி இல்லாத போதும் , கட்சிக்கொடிதூக்கி , ஓட்டு கேட்பவனுக்கும்,
இந்த முறையாவது நம்ம கஷ்டம், தீராதா என்று நம்பிகையுடன் ஒட்டுப்போடும் சாராசரி இந்திய குடிமகனும் குடிக்க சுத்தமான தண்ணீரே கிடைப்பதில்லை , அப்படி கிடைத்தால் குடி நீர் வரி, 0.25 காசுகள் , அதுவும் வாரம் இரு முறை மட்டும் ,ஆனால் குளு குளு அறையில் வசிக்கும் , இந்தியாவின் வருங்கால தான் தோன்றி தூண்கள் , குடிக்கும் குளிர்பான தயாரிப்பு தொழில் சாலைக்கு இருபத்தினான்கு மணி நேரமும் செல்லும் தண்ணீர் விலை 0.05 காசுகள் , அவனோ இரண்டு நிமிட விளம்பரதிற்கு 2 கோடி, செலவு செய்கின்றான், அதுவும் சுவை மிகுந்த நீரையே தயாரிக்க பயன் படுத்துவான், விற்பனை 1 லிட்டர் 50.00 ரூபாய்...சராசரி இந்தியர்களின் 2 பேருடைய இரண்டரை நாள் சம்பளம்.....
இதற்கு மட்டும் தாராள்மாக நீர் தரும் அரசு ...?



நீங்கள் குடிக்க வேண்டாம் என்று கூறவில்லை , உங்கள் உழைப்பு , உங்கள் பணம் ,அதில் நீங்கள் 5 இள நீர் குடிக்கலாம், அல்லது 3 தண்ணீர் கலக்காத,பழரசம் குடிக்கலாம், ஆரோக்கியம் கூட...... சிந்தியுங்கள்..... இளைஞர்களே.....!



புத்தாண்டு வருகின்றது , இனி வரும் ஆண்டிலாவது நம்மால் இயன்ற , சிறு சிறு உதவிகள் , நாம் தாய் தேசத்திற்கு , நம் சமுதாயதிற்கு , நம் மக்களுக்கு உதவுவதோடு, தேர்ந்தெடுத்து வாங்குதல் , மூலமும்...



நம் வாழ்வில் சுய ஒழுக்கம் , உண்மை யாய் இருத்தல்... சுய நலம் , பேராசை , புகழுக்கு அடிபணியாமல்.... சமூக ஏற்ற தாழ்வினை , ஒழிக்க நம் பங்கினை ஆற்றுவோம்.....



தமிழர்கள் என்று கூறி ஒன்று படுவோம் , தமிழன என்று மட்டும் தனித்திராமல்....!


தமிழையும் வளர்ப்போம் , மற்ற மொழிகளை அழிக்காமல்..?



இந்தியர்களாய் இணைவோம்.... இனி ஒரு புதுப் பாரதம் படைக்கவே...!


என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


அன்புடன்
இரா .செந்தில் நாதன்

நன்றி : செம்மலர் & அக்னி சிறகு

பி .குறிப்பு -
இவை யாவும் என் சொந்த கருத்துக்கள், ஒரு சராசரி இந்திய இளைஞனாய் , என்னுள் தோன்றிய கருத்துக்கள் , யாரையும் புண் படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை , அங்ஙனம் இருந்தால் தெரியப்படுத்தவும் .......



Friday, December 28, 2007

இந்தியா வல்லரசு ஆகுமா ?

இந்தியா வல்லரசு ஆகுமா...?

இன்றைய இந்தியர்கள் , குறிப்பாக இளைஞர் மனதில் எழும் கேள்வி...?


இந்தியாவில் மட்டுமல்ல , பெரிய அண்ணன் அமரிக்கா, சீனா , போன்ற நம்ம நலம் விரும்பிகளும் எதிர்பார்க்கும் ,பயப்படும் விசயம்....


இந்த கேள்விக்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு..... நான் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் ( உண்மை ) இந்த தலைப்பிலே மூன்று முறை பேசி வென்றும் உள்ளேன், அப்பொழுதே க்ரையொஜெனிக் , போன்று மேற்கோள் காட்டி இந்தியா , கட்டாயம் வல்லரசு ஆகும் என்றும் கூறினேன், மூன்றாம் வருடம் இதே தலைப்பில் பேசியபோது ,எனது ஆசிரியையே பொருமை இழந்து , நீயும் மூன்று வருடங்களாக பேசிகொண்டுதான் இருக்கின்றாய், எப்ப இந்தியா வல்லரசாகும்னு..? கேட்டாங்க...

அதுக்கு நான் இப்போதான் படித்து கொண்டு இருககின்றோம் , நாங்க வந்து இந்தியாவை வல்லரசா ஆக்குவோம் என்று சொன்னேன்...

இப்படி இருக்க... இயக்குனர் சீமான் என்ன கூறுகின்றார் , என்பதை பாருங்கள்



இவை கூறுவதும் ஏற்று கொள்ளகூடியதாகத்தான் உள்ளது...

எப்படியோ , இனியாவது நாம் திருந்தி , வீ ட்டை மற்றும் அல்லாது நாட்டையும் முன்னெற்றுவோம்....

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் , இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்....



அன்புடன்

இரா.செந்தில் நாதன்

Monday, October 1, 2007

இந்தியாவின், முன்னேற்றம்...?

சேது சமுத்திர திட்டம்... சுற்றுப்புற சூழலை , சிறிது பாதித்தாலும்,பொதுவான பல பயன் கொண்டு ,( வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றம் ) பெரும்பான்மையோர்॥ வரவேற்கின்றனர்.... நானும் கூட... செய்தி
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ,மற்றும் ஜூ வி....
சேது பாலத்தின் திட்ட மதிப்பு..2004 ஆம் வருடம்.. ரூபாய் 2400 கோடி... 2005 இல் திட்டம் துவங்கும் போது ( மணல் அள்ள ஆரம்பித்த பொழுது) , ஏறக்குறைய திட்ட மதிப்பு.. ரூபாய் 3500 கோடி , ஆனால் தட்போதைய நிலவரப்படி ரூபாய் 4000 கோடிகள் வரை , இத் திட்டத்தை முடிக்க தேவைப்படலாம்... ஆக பற்றாக்குறை... 1500 கோடிகள்....( அரசியல் வியாதிகளுக்கு ரொம்ப கம்மித்ான்) இதை எவ்வாறு ஈடு செய்வர்......( எல்லாம் நாம் வரி பணம் தாங்க) ? இந்நிலையில்... 01-10-07
அன்று தமிழக அரசு ,பொதுவேலை நிறுத்த, அழைப்பு அறிவிக்கின்றது... நல்ல வேளையாக நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது , நாட்டில் இன்றும் நீதி மன்றங்கள் , முறையாக , செயல்படுகின்றன என்பதை சுட்டியும் காட்டின... ஆனாலும் போது வேலைனிறுத்தத்ிக்கு பதில் உண்ணாவிரதம் ...என்று ஆனது... நடந்தது சற்று ஏறக்குறைய , வேலை நிறுத்தம் தான்... இதன் விளைவுகளை பார்ப்போம்.... முதலில் பொருளாதார ரீதியாக பார்ப்போம்... முதலில் கோவை மாவட்டம் திருப்பூர், சுமார் ரூபாய் 50000 கோடி வருட வியாபாரத்தில் ,ஒரு நாளைய இழப்பு சுமார் 100 கோடி,(ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu) அடுத்து கரூர் சுமார் 13500 கோடி வருட வியாபாரத்தில் , ஒரு நாளைய இழப்பு 36 கோடி... இப்படி 29 மாவட்டங்களில் சுமாராக சுமாராக சொன்னாலே... இப்படி
இது போக சுமாராக 62400000 பேர் கடைசி கணக்கு எடுப்பின் படி , இதில் குழந்தைகள், முதியவர்கள் , ஊனமுற்றோர் , மற்றும் நம்ம அரசியல்வாதிகளையும் கணக்கில் விட்டுவிட்டு( ஏன் என்றாள் அவர்கள் நாடு முன்னேற , கால, நேர , பாகுபாடு இன்றி தொண்டு செய்பவர்கள்) பாதி பேரை, கணக்கில் எடுத்துக்கொள்வோம்... சுமார் 30000000 மக்கள் உடைய மனித மணி நேரங்கள் ..... வீணடிக்கப்பட்டன.... இது சற்று ஏறக்குறைய மலேய்சியாவின் மொத்த மக்களின் உழைப்புக்கு ஈடாகும்... ஜப்பானின் அரை பங்கு மக்களின் உழைப்பிட்கு ஈடாகும்....


இப்படியே நாம் பயணித்தால் ...விரைவில்....இந்தியா முன்னேறி விடும்.. 2020 இலக்கை அடைந்து விடலாம்....

அன்புடன்
கரா. செந்தில் நாதன்