Thursday, April 10, 2008

மதம்..... பிடிக்காத.........மதம்......????? 1

மதம் பிடித்த யானை மட்டுமல்ல ,மனிதனும் பயங்கரமானவன்,

மதத்தை மனிதன் பின்பற்றலாம், ஆனால் மனிதனை மதம் பீடிக்கலாகாது, நான் இந்துக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன், என்னை ஆரம்ப காலங்களில் கவர்ந்த மதம்-இந்து ,கடவுள்- முருகனும், அய்யப்பனும்,சபரி மலைக்கு இதுவரை நான்கு முறை சென்று,வந்ததும் உண்டு ,ஆனால் என் இரண்டாவது வகுப்புதோழன் சத்தியன் வந்த பிறகுதான் ,கிறிஸ்துவ மதம் எனக்கு அறிமுகம் ஆனது,அன்றிலிருந்து நான் பாதி கிரிஸ்துவன்...அவனுடனே சில பல சமயங்களில்,(முக்கியமாக தேர்வு நேரங்களில் )சிறு வயதில் இறந்த அவனது சகோதரியின் கல்லரைக்கு சென்று வழிபட்டு வருவோம்..வேளாங்கன்னி மாதாவையும் நான் இருமுறை தரிசித்தது உண்டு... அது போலவே எனக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்தது என் தோழி பாத்திமா,என் முதல் வகுப்பில் இருந்து என்னுடன் ஒரே வகுப்பில் இல்லாவிடினும் ,உயர்னிலைப்பள்ளிவரை கூடப்படித்தவள்.. நாகூர் தர்காவிற்கும் இருமுறை சென்று வந்துள்ளேன்...அதன் பிறகு நான் வளர வளர நட்பு வட்டமும் வளர்ந்தது..

காலங்கள் மாறின... என் சகோதரன் பெரும் புத்தக விரும்பி,அவரது உபயத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ற ஓஷோ என்று அழைக்கப்படும்,ரஜினீஷ் அவரது புத்தகத்தை என் ஏறக்குறைய 15 வயதில் படித்தேன்....

சில இன்னும் மர்மங்கள் ...
தொடரும்....







2 comments:

said...

தொடர வாழ்த்துக்கள்
எதிர்பார்ப்புடன் .........

said...

தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்
நன்றி ,, நண்பரே