Friday, November 30, 2007

ஆசை நாயகன் அஜித் , சங்கரின் ரோபோ....?






தலய பத்தி , ஒரு பதிவு எழுதவில்லை என்றால் , எப்படி என்னை பதிவராக ஏற்றுக்கொள்வார்கள்... ஆதலால் இது
நான் அஜித் ரசிகன் இல்லை , ஆனால் அஜித்தை பிடிக்க காரணம் , எந்த பின்புலமும் இல்லாமல் , தம் சுய உழைப்பால் , உயர்ந்தவர் , பலரை உயர்விததவர் , பந்தா இல்லாதவர் , அதிக தன்னம்பிக்கை உள்ளவர் , ஆனால் இவரை தலை கணம் ,கொண்டவர் என புரிந்து கொள்ள பட்டவர்,

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளி& ஒலிபரப்பான நிகழ்ச்சியில் அவரது குணாதிசயங்களை காணலாம்... அண்ணன TBCD வலைப்பூவில் பார்க்கவும்


இப்போதான் சூடான செய்தி
தொடர்ந்து , வெற்றிகளையும் , சர்ச்சைகளையும் , குவித்து வரும் , தமிழ் திரை உலகின் , நாளைய,இயக்குநர்களின் ,தலைவன் , கனவு தொழில்சாலையினை புதிய பரிணாமத்தின், வெற்றிகளுக்கு கொண்டு சென்ற திரு .சங்கரின் , கனவு படமான ரோபோ , அதில் சாருக்கான் தயாரித்து , நடிபபதாக இருந்தது.. ஆனால் இப்போது திரு .அஜித் ,மற்றும் சங்கரும் இணைந்துள்ளார்கள் , என்பது செய்தி....
அன்புடன

இரா .செந்தில் நாதன்

Saturday, November 24, 2007

மலேய்சியா , உரிமை..

கடந்த சில மாதங்களாக , மலேய்சியாவில் பரபரப்பாக பேசப்படும் , விவாதிக்கப்படும் விசயம் , இன்று நான் ஒரு வலைப்பூவில் கண்டேன் , இந்தியர்களின் உரிமைகள் மறுக்கப்டுகின்றதா , என் என்னுலும் கேள்விகள் ,ஒரு இந்தியனாய் , இருந்து கொண்டு , என்னால் அமைதியாக பார்க்க மற்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டும் , இயன்றது ... வேதனைக்குறியது... அதை உங்களுடன் பகிர்ந்து , உங்கள் கருத்துகளையும் ,அறிய விளைகின்றேன்....

வலைப்பூ.. ( இங்கு சொடுக்கவும்)

இதை பற்றிய செய்தி ஸ்டார் பார்க்கவும்...

இவ்வியககத்தின் இணையம்

அன்புடன்

இரா .செந்தில் நாதன

Wednesday, November 7, 2007

நம்பிக்கை ஒளி

இணையத்தில் பார்த்த படம் ,
ஒரு சிறிய அல்ல சற்றே பெரிய குடும்பம், அவர்கள் உறங்க கூட , போதிய இடமில்லை , ஆனாலும் உயிர்களின் மேல் கருணை ,கொண்டு தம் வளர்ப்பு பிராணிகளுக்கு , தம் சிறு படுக்கையில் ,
இடம் கொடுத்து ,மழைநீர் கூரையில் இருந்து ,ஒழுகும் போதும் கூட, அவர்களின் முகத்தில் உள்ள ,நிம்மதியான புன்னகையை , பாருங்கள் , அத்தனை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ,

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது , பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையே பிரச்சினையாய் உள்ளவர்கள் , மகிழ்ச்சியாய் வாழும் பொழுது ,நம் வாழ்க்கையில் உள்ளவை பிரச்சினையே அல்ல, கிடைத்த வாழ்க்கையை , மனம் நிறைவாக ஏற்று , மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்...

இருளை அகற்றும் ஒளி போல், நாம் மனத்தில் உள்ள கவலைகளை நம்பிக்கை எனும் ஒளி(உழி ) கொண்டு அகற்றி ,வாழ்வு செழிக்க
அனைத்து நல் இதயங்களுக்கும் , உள்ளம் கனிந்த , தீபத்திருநாள் வாழ்த்துகள்...

அன்புடன்

கரா .செந்தில் நாதன்