Wednesday, January 13, 2010

என்னை கவர்ந்தவர்களும் ,பதிவர் அரசியலும்...


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ...

இன்பம் துவக்கி.... இல்லம் ,உள்ளம் ... நிறைந்த மகிழ்வை ,

வெண் கதிர்கோன்.... அருளட்டும் .....


கடந்த
வருட நினைவுகளின் தொடர்ச்சி...

கடந்த
வருடம் ....புதிதாய் புதிய நண்பர்கள் பலருக்கும் ,
எனக்கும்
நட்பெனும் ஜனனம் கொடுத்த ஜனவரி ....
தலைவர்
வெயிலானுக்கு மின்னஞ்சல் அனுப்பியதன் விளைவாக ,செயலாளர் அமுக்கினார் ,பொருளாளர் ஈரவெங்காயமும் ,மற்றும் ராமன்குட்டியும் .. அப்புறமாக அண்ணனும் , அன்பின் முரளியும் அறிமுகமாகி வருடமாகின்றது ....

முதல் பதிவர் சந்திப்பு பிரபல பதிவர் அதிஷா , அவரின் சகோதரி திருமணத்தில் நடந்தது , அங்கு தான் அண்ணாச்சியையும் , சஞ்சய் காந்தியையும் , அதிஷாவையும் , மட்டுமல்ல தலையையும் , செயலையும் முதன் முதலில் சந்தித்தேன் .....

உரையாடல் பின்வருமாறு...
நண்பர்களே வணக்கம் ,

நானும் திருப்பூர்காரன்தான் ,இன்றுதான் தங்களைப்பற்றி அறிந்தேன் , பேரரசன்

-----

நல்வரவு பேரரசன்.
முதல்ல உங்க வலைத்தளத்தை சரிபண்ணுங்க. வலைப்பக்கத்தை திறந்தால் பாப்-அப் விண்டோ திறக்கிறது.
சரி! நண்பர்களே விரைவில் திருப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிவிடலாம்.
--
அன்புடன்,
☼ வெயிலான்.
---------
சிக்கிட்டாருய்யா! அமுக்கு!
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

--------
ஒருத்தர் கிடைக்கக்கூடாதே!!!! அதுக்குள்ள அமுக்கிடுவீங்களே!!! :) :)

ம்ம்ம்..

வாங்க பேரரசன்!!! ஒருநாளைக்கு எல்லோரும் மீட் பண்ணுவோம்!!

ஆதவன்
-------
சிக்கிண்டாருடோய் ஒரு பதிவரு...
வாயெல்லாம் நம நமங்குது வெயிலான்...
போட்டுத் தாக்கிறலாமா..?

வியாழன் மதியம் லன்ஞ்..?

சீக்கிரமா கன்ஃபார்ம் பண்ணுங்க..

regards
Saminathan


---------

போட்டுத் தாக்கிறலாமா?னு கேட்டதும் செந்தில ஆளவே காணோம். பயப்படாதீங்க செந்தில்!
மொதல்ல உங்க அறிமுகத்தை சொல்லுங்க.
ஞாயிறாயிருத்தல் நலம்ங்கிறார் பரிசல்!
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? சொல்கிறீர்கள்?
அவரவர் விருப்பங்களைச் சொன்னால், விரைவில் சந்திக்கலாம்.
முரளி,
கடலையூர் செல்வம் மின்னஞ்சல் முகவரியையும் இதோடு சேர்த்து விடுங்கள்.
பரிசல்,
தமிழ் உதயா முகவரி........
வேறு யாராவது திருப்பூரார்கள் இருந்தால் அவர்களையும் இந்த மின்னஞ்சலில் சேருங்கள்.
சந்திக்கலாம் விரைவில்......
அன்புடன்,
☼ வெயிலான்

இதற்கு அப்புறம் எழுத....பொதுகூட்டம் கூட்டனும்...,இப்படியான பதிவர் உலகத்தில்,, நானும்...விழுந்தேன்.......
இத்தகைய வியத்தகு நண்பர்களை தந்த காலமெனும் ,ஓடத்திற்கு ஓராயிரம் நன்றி.....

நானும் சீரியஸா நிறைய எழுத நினைகின்றேன் முடியல.... அதனால்...

2010 நான் மிக எதிர்பார்க்கும் படம் , தமிழ்படம்...
ஆமாங்க... தயாநிதி அழகிரி தயாரிக்கும் தமிழ்படம்...
இயக்குனர் அமுதன்.....

அது பற்றி தொலைகாட்சியில் வந்த நேர்காணல்....


ப்டம் தான் , நல்ல காமெடியா இருக்கும்னு , பார்த்தா? நேர்காணல் அதவிட , காமெடி போங்க....

சிவா , தயாநிதி அழகிரிகிட்ட கேட்குறாரு.... எதனால இந்த படத்தை தயாரிக்கணும்னு நினைசீங்கன்னு....


அதுக்கு அவர் என்ன பதில் சொல்லி இருப்பார்ன்னு நினைகிறீர்கள்...?

என்னை மதுரைக்கு தூக்கிடு போய்..மிரட்டி படம் எடுக்க சொன்னாங்கன்னு...!

மனுசன் ரியலி , சிம்பிள்...அதான் ... எனக்கு அவரை பிடித்தது...
***************************************************************************
பின்னலூருக்கு வருகை புரிந்த அண்ணன் திரு,தாமிராவோடு ..... கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.... அதுவும் அவதாரை மிஸ் பண்ணி... சாரி முரளி....


மிக மிக அழகான , மாலைபொழுதாக ...இனிமையா (ABSOLUTE) இருந்தது.... ஈரோட்டு மாப்பிள்ளைகள் கார்த்தியும்.. (boobs)அதாங்க பூபதியும்...ஈரோட்டு சிங்கம் வால்பையனும்...கலந்து சிறப்பித்தார்கள்.....மேலும் திருபூரில் இருந்து இளைய இளவல்...இம்சித்தார்....


மகிழ்வான..நிறைவான தருணம்.... யாதனில் நண்பர்களுடன் உண்ணும் விருந்து...
விகடன்ல மதன் சொல்லி இருக்கிறாரு... அதன் படியே..மிக மிக நிறைவான , மகிழ்வான தருணம்.. இது...

நன்றி நண்பர்களே...

******************************************************************

சரி பொங்கல் அதுவுமா... பேரரசன்னு பெயரை வச்சுகிட்டு சும்மா , இருந்தா எப்படி...

சாம்ராஜ்யத்தை சுத்தி பார்க்க போறேன்... அதுவும் பறக்கும் ஒத்த கொம்பு குதிரையில்..(unicorn) கும்பகோணம், ஜெயம் கொண்டம்(கங்கை கொண்ட சோழபுரம்) அப்புறமா தரணி புகழும் ..பெரிய கோவில்னு பெரிய பட்டியல்...
வெற்றிகரமா வந்து மிச்சம் சொல்லுறேன்.....
நண்பர்கள் தொடர்புக்கு...
98947 83597

இங்கே பதிவு செய்தா 4 பேருக்கு உதவியா இருக்கும்....

Friday, January 1, 2010

ஒரு இனிய அனுபவம்..

அன்பு கொண்ட ,அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
முதல்ல கொஞ்சம் சுய விளம்பரம்.. நீங்க இது வரைக்கும் இங்கே பதிவு செய்யலைனா ..நல்ல நாள் அதுவுமா,நல்ல காரியம் செய்யுங்கோ .....

புத்தாண்டு சிறப்பு ஒலி,ஒளியும் ..... பாருங்கோ ,மத்தவை பின்னுடடதுல ,

ரொம்ப நாள் கழித்து எழுதரேன்,ஆனா நிறைய படிக்கறேன்..(முயற்சிக்கறேன்)ஆனா பதிவர், பதிவர் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் ,கலந்து கொள்கிறேன் ...முதலில் சிறுகதை பட்டறை ,இங்குதான் அதிக பதிவர்களை,அறிந்து கொண்டேன் ,குருஜி ஜியோராம் ஜி ,திரு . பட்டாம்பூச்சி ,திரு . தண்டோரா ,இயக்குனர் கேபிள் சங்கர் , நண்பர் நெய்தல் ,மற்றும் சகா கார்க்கி...எழுத்தாளர் நர்சிம்,திரு அப்துல்லா ,திரு ஆதி போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்தனர்...... கடந்த வருட சுவடுகள் தொடரும் .....


செயலாளர் பரிசல்காரனும் , இயக்குனர் திரு.சுரேகா , சகா முரளி ,நண்பர் சத்யம் இணைந்து கலக்கிய...

Tuesday, July 21, 2009

சூரியனை விழுங்கிய பாம்பு(எ) நிலா...சூரிய கிரகணம் சில புகைபடங்கள்( மீள்)

சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது..ஆனால் நிசத்தில் சூரியனை விழுங்கும் பாம்பை,மன்னிக்கவும்,சூரியனை நிலா மறைக்கும் (ஆகஸ்டு-1-2008)படங்களை பாருங்கள்,

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
இது சைபீரியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்,ஒரு சில நிமிடங்கள் சூரியன் முழுவதுமாக மறைந்தது,இக்கிரகணம் கனடா,கீரீன்லாந்து,மத்திய இரஷ்யா,கிழக்கு கசகஸ்தான்,மேற்கு மங்கோலியா மற்றும் சீனாவிலும் முழுமையாக தெரிந்தது....!

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் , மீண்டும் 7 ஆண்டுகள் கழித்துதான் வரும்....

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் 2017 வருடம் வடக்கு அமரிக்காவிலும்,ஐரோப்பாவில் 2026லும்,ரஸ்யாவில்2030...தெரியும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

Saturday, June 13, 2009

கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல!:இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி


நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது!

தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் 'நெற்றிக்கண்' புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு :

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான் பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து…

'மாவீரன்' பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982-ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது.

கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன்-சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகின்றது!

பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிசனர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டிஜிபி சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க-அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை டிஜிபி சண்முகம் பதிவு செய்தார்!

இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது!Image

1986-ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசன்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிசனர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிசார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

1982-ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்….

1986-ல் சென்னை போலிஸ் கமிசனர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்…

தமிழக 'க்யூ' பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்!

சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஜினல் பிரபாகரன்தானா என்பதை உறுதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது!

அந்த அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ.3 லட்சம்.

அந்த அமைப்பின் இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே 18-ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982-ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986-ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்!

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே 19-ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுணர்களின் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை!

இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான அந்த அமைப்பின் தென் இந்திய ஆணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இந்தியா திரும்பினர்!

இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்!

இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது!

நன்றி அதிகாலை
நெற்றிக்கண்

Monday, June 1, 2009

தேவதைகளும்.... மற்றும் சாத்தான்களும்...AngelsandDemons


தேவதைகளும்....மற்றும் சாத்தான்களும்..
.(AngelsandDemons), டாவின்சி கோட், படக்குழுவினரால் எடுக்கப்பட்ட படம்..என்பதால் இன்று பார்க்க சென்றிருந்தேன்...

டான் பிரவுனின்
இரண்டாவது நாவலான தேவதைகள் மற்றும் சாத்தான்கள்..கதைதான் களம்.. மற்றும் தலைப்பும்...இயக்கம் ரான் கோவார்டு, நாயகன் டாம் கான்க்ஸ் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல...! நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை....
வாடிகனில் போப் இறந்த பிறகு.. புதிய போப் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் வேளையில்.. கனடாவில் ஓர் புது அணு ஆராய்ச்சியின் விளைவாக இறைதுகள்,பெரும் சக்திவாய்ந்த துகள் ஒன்றை கண்டுபிடிக்கின்றார்கள்... அடுத்து போப்பாக தகுதியுள்ள நான்கு மதகுருமார்கள் கடத்தப்படுகின்றார்கள்...அணுத்துகளும் கடத்தப்படுகின்றது... இவற்றை இல்லுமினாட்டிகள் தாங்கள்தான் செய்வதாகவும் அடுத்த 8 மணி முதல் ஒருவர் பின் ஒருவராக் மதகுருமார்கள் மணி நேர இடைவெளியில் கொல்லப்படுவார்கள், எனவும்..இறுதியில் பிரகாசமான ஒளியில் வாடிகன் நகரம் அழியும் என்றும் தகவல்... வருகின்றது...கதாநாயகன் வாடிகனுக்கு அழைக்கப்படுகிறார்....அப்புறம் ..............முழுக்கதையையும் நான் கூறிவிட்டால்... படம் யார் பார்ப்பார்கள்...?
படம் பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் கருத்தை கூறுங்கள்... இதில் என்ன வியப்புக்கு உரிய விசயம் என்றால்...அங்கு தங்கள் மத நம்பிக்கையை எப்படி எல்லாம் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர்... நம்ம ஊரில் இவ்வாறு படமோ , அல்லது நாவல்களோ வருவதற்கு இன்னும் , பல வருடங்கள் ஆகலாம்.. கமல் ஒரு தசாவதாரத்தில் ரங்கராஜனை முன்னிறுத்தியதையே நம் மக்களால் பொருக்க இயலவில்லை...?
வாடிகன் மிக அழகாக உள்ளது, அட்டகாசமாக உள்கட்டமைப்பு கொண்டுள்ளது ..என் நினைக்கின்றேன்... வாய்ப்பு கிடைத்தால் , ஒரு முறை ..அல்ல பல முறைகூட சென்றுவரலாம்....

ஒரு காட்சி

வாடிகன் பாதிரியார்: கதாநாயகனிடம், உங்களுக்கு ஆண்டவர் மேல் நம்பிக்கை உள்ளதா...?மானிட கடவுள்கள் மேல் அல்ல... ஆண்டவரிடம் நம்பிக்கை உள்ளதா...?

கதாநாயகன் :அறிவு ஏற்க மறுக்கிறது...!


வாடிகன் பாதிரியார்:உங்கள் இதயம்...?

கதாநாயகன் :இதயம்... அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என்கிறது..!


அனேகமாக , இந்த படமும்,டாவின்சி கோட் போல் சர்ச்சயை ஏற்படுத்துமா....? என்பது போக போக தெரியும்.

Sunday, May 31, 2009

என் மக்களே எழுந்து நில்லுங்கள்!, அருட்தந்தை ஜெகத்கஸ்பர் நக்கீரனில், வரும் தொடர்.....

இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் “”தோல்வியின் பண்பாடு” – Culture of Defeat ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது.

படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: “”உன்னை தோற்கடித்தவனின் இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!”.

நான் பலமுறை பார்த்தும் சலித்துப் போகாத ஆங்கிலத் திரைப்படம் கிளாடியேட்டர் (Gladiator) மகத்தான ராணுவத் தளபதியான மாக்சிமுஸ், சதியால் சந்தையில் அடிமையாக்கப்பட்டு, உரோமாபுரி நகரத்து மக்களின் கேளிக்கைக்காக உயிரை பணயம் வைத்து சண்டையிடும் கிளாடியேட்டர் ஆகி, அப்பேரரசின் மன்ன னுக்கே சவால் விட்ட கதைதான் கிளாடியேட்டர். அப்படத்தின் ஒரு இடத்தில் மாமன்னன் ஜூலியஸ் சீசர் மாக்சிமுஸை தன் போர்க்களக் கூடாரத் திற்கு இரவுப் பொழுதில் அழைப்பார். “”வா… மாக்சிமுஸ் என் காதோடு கதை பேசு… உரோமாபுரி என்றால் என்ன?” என்று கேட்பார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல் திரைப்படத்தின் கதாநாயகன் மாக்சிமுஸ் நிற்பான். அவனை உற்றுப் பார்த்து சீசர் சொல் வார். “”உரோமாபுரி என்பது ஓர் எண்ணம். வனைவு. உயர்ந்தவை என நாம் கனவு கொள்ளும் அனைத்திற்கும் தாய்மடி கிடைக்குமிடம். மாக்சிமுஸ்… உரோமாபுரியின் இன்றைய ஒழுக்கம் அவநம்பிக்கை தருகிறது. இன்னும் ஓர் கடும்பனிக் காலத்தை அது தாக்குப் பிடித்து நிற்குமென நான் நம்பவில்லை. உன் படைகளை தயாராய் வைத்திரு. உரோமாபுரிக்கு நீ தேவை” என்பார் சீசர்.

“”சியர்சியாவின் சிவந்த குன்றுகளிலே அடிமைகளின் பிள்ளைகளும் அடிமைப் படுத்தியவர்களின் பிள்ளைகளும் ஒன்றாகக் கரம் கோர்த்து விளையாடித் திரியும் காலம் வரும் எனக் கனவொன்று வைத்திருக்கிறேன்… I have a dream் என்ற மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் உரையை நாம் மறக்க முடியுமா? அரை நூற்றாண்டிலேயே அவரது அரசியற் பேரன் பராக் ஒபாமா அடிமை வரலாற்றின் பழைய ரத்தக் கறைகளை புதிய கனவுகளால் கழுவிடும் உன்னதத்தினை காண்கிறபேறு நமது கண்களுக்குக் கிடைக்க வில்லையா?

கிளி ஜோசியக்காரர்களை எனக்குப் பிடிக்கும். நேரம் இருந்தால் எங்கு அவர்களை பார்த்தாலும் கையை நீட்டிவிடுவேன். அவர்கள் சொல்லும் எதையுமே நான் நம்புவதுமில்லை, அவர்கள் சொல்லும் எதுவும் நடப்பதுமில்லை. ஆனால், 50 ரூபாய் கொடுத்துவிட்டால் வஞ்சகமின்றி நம்பிக்கை வார்த்தைகளை மடி நிறைய கொட்டிக் கொடுப்பார்கள். நான் கை நீட்டுவதோ அவ் வார்த்தைகளுக்காக அல்ல. அவர்கள் கடைபிடிக்கும் தொழில்நுட்பத்தை ரசிப்பதற் காக. முதலில் ரெண்டும் கெட்டானாகத் தொடங்குவார்கள்… ஆபத்து என்பதுபோல் நடுவழியில் கொக்கி போடுவார்கள்… எல்லாம் சரியாகி பிரமாதமாக இருக்கும் என்ப தாக முடிப்பார்கள். இன்னும் 10 ரூபாய் போட்டுக் கொடுக்கலாம் போல் நமக்கு இருக்கும். நானறியா நாள் முதல் இயற்கை இரகசியமாய் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று நம்பிக்கை வார்த்தைகளுக்கு இருக்கிற உயிர் தரும் ஆற்றல்.

பைபிளில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்து, இப்போதும் மறக்காமல் வைத்திருக்கிற பகுதிகள் எவையென்று கேட்டால் கடவுள் தன் தூதர்கள் வழி, தோல்விகளை மட்டுமே சம்பத்தாய் சுமந்து வந்த தன் யூத மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள்தான். “”என் மக்களே… எழுந்து நில் லுங்கள்… உங்கள் துக்க உடைகளையும் துயரக் கோலத்தையும் தூரப் போடுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமாய் சிதறுண்டு போன என் பிள்ளைகளாகிய உங்களை மீண்டும் நான் கூட்டிச் சேர்ப்பேன்… அடிமைகளாய் சிதறிய உங்களை பெருமையின் ஆடைகள் அணிவித்து உரிமைக் குடிமக்களாய் கூட்டி வருவேன். அந்நாளில் பாலைவனத்தில் லீலி மலர்கள் பூக்கும். பாறைகளினின்று நீரூற்றுகள் புறப்படும்… இவ்வாறு பல நூறு வரிகளை நான் மறவாது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையும் வசீகரமாய் தூவிச் செல்கிற நம்பிக்கை.

எனவே தான் நொறுங்கிப் போய், இருள் கவிந்து, செல்லும் திசை தெரியாது நிற்கும் நமது ஈழத்தின் ரத்த உறவுகளுக்கு நாம் தொடர்ந்து தரவேண்டியது நம்பிக்கை. எப்படி மழையும் பனியும் மண்ணில் விழுந்தபின் தம் பயனைத் தராது திரும்புவதில்லையோ அவ்வாறே நம்பிக்கை வார்த்தைகளும். எல்லா இரவுகளும் விடியும். எல்லா கொடுமைகளும் முடியும். இலையுதிர் காலம் இதுவென்றால் வசந்தம் விரைவில் வருமென்றுதானே அர்த்தம்?

நான் எழுத்தாளன் அல்ல. எழுதிப் பெரிய பழக்கமும் இல்லை. நண்பர் காமராஜ் அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலேயே “மறக்க முடியுமா?’ எழுதத் தலைப்பட்டேன். எழுதத் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீதான இறுதி முற்றுகை தொடங்கியது. அதன்பின் என்னையே நான் ஆற்றுப்படுத்திக் கொள்ளும் களமாகவே தொடர்ந்து எழுதினேன். இக்களம் இல்லாதிருந்தால் ஒருவேளை நானே கூட உடைந்து போயிருப்பேன். நான் எழுதியவை உங்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் தந்ததென்பது எனக்குத் தெரியாது… ஆனால் நான் தகர்ந்து போய்விடாமல் தாங்கியது இந்த எழுத்து வடிகால்தான். எழுத்தின் வல்லமையை நீண்ட நாட்களுக்குப் பின் உணர உதவிய நக்கீரனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

கடந்த இதழ் படித்துவிட்டு “”எல்லாம்தான் முடிந்து போயிற்றே… இனியும் அவை பற்றி ஏன் எழுதிக் கிளற வேண்டும்… ஆட்சியில் இருப்போரிடமுள்ள தொடர்பு களை பழுது செய்யாமல் மக்களுக்கு இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யலாமே…” என்று அக்கறை யுடன் அறிவுரை சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் முதலில் சொன்னது, “சரியாக முடியாதவரை எதையுமே முடிந்துவிட்டதாகக் கருத முடியாது’. Nothing is settled until settled right. மீண்டும் நாம் அனைவருமாய் சொல்வோம், சரியாக முடியாதவரை எதுவும் முடிந்ததாகக் கருதப்பட முடியாது.

முக்கியமாக காழ்ப்புணர்வும் பகைமிகு தன்மையுமின்றி இதய நேர்மையுடன் முன்வைக்கப் படும் உண்மைகள், உறவுகளையும், பரஸ்பர மதிப்பினையும் வலுப்படுத்துமென்பதே எனது ஜனநாயக அனுபவமும், நம்பிக்கையும். நானொன்றும் கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குருவானவர் அல்ல. கொஞ்சம் விட்டேத்திதான். என்னிடத்தில் குறைகளும் பல உண்டு. எனினும் சுயநலனுக்காய் பொய்கள் சொன்னதாய் நினைவில்லை. அதுவும் மனித உயிர்கள் சம்பந்தப்படுகையில் உண்மை சொல்லத் தயங்குவதுபோல் பாவம் வேறெதுவுமில்லை.

உண்மைக்கு உள்ள பிறிதொரு குணாதிசயம் விடாப்பிடித்தன்மை. பொதுவாக நீங்கள் பார்த்தீர்களென்றால், பொய் காற்று வேகத்தில் பரவும். எல்லா இடத்திலும் முதல் ஆளாய் போய் நிற்கும். ஆனால் உண்மை, ஆமை போல. உருண்டு, புரண்டு, விழுந்து, எழுந்து, சிராய்ப்புகள் பட்டு, களைத்துப் போய் -ஆனால் வந்து சேரும். காலதாமதம் ஆகுமே தவிர, உண்மை நிச்சயம் வந்து சேரும்.

இதனை நான் இங்கு குறிப்பிட தனிப்பட்ட காரணமும் உண்டு. “சென்னை சங்கமம்’ தொடர்பானது அது.

2007 பெப்ருவரியில் முதல் “சென்னை சங்கமம்’ நிகழ்ந்தது. தமிழக கலை-பண்பாட்டுக் களத்தில் தீர்க்கமான தாக்கங்களை உருவாக்கி தொடரும் “சென்னை சங்கமம்’ அறிமுகமான கதை மிகவும் எளிமையானது. மயிலாப்பூர் லஸ் கோயில் சாலையிலுள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் கனிமொழி அவர்களோடான உரை யாடலில் பிறந்ததுதான் சென்னை சங்கமம். சென்னை நகர் கொண்டாடும் ஒரு பண்டிகை கூட தமிழர் பண்பாட்டு வரலாற்றை சார்ந்ததாக இல்லையே என்ற ஆதங்கத்தை அளவளாவி, ஏதேனும் செய்ய வேண்டுமெனப் பேசி, கிராமியக் கலைகளை மையப்படுத்தும் சிறியதோர் கலைவிழாவினை தை பொங்கல் காலத்தில் அமைக்கலாம் என முடி வெடுத்தோம்.

மிகச்சிறிய, ஆனால் செறிவான கலைவிழா எண்ணத்தை பூங்காக்கள், வீதிகளெங்கும் தமிழ் கலைகளின் மலர்ச்சியாய் விரிய வைக்கும் எண்ணம் தந்தது. சென்னை சங்கமம் போல் பெங்களூரில் “”பெங்களூரு ஹப்பா” நடத்தி வரும் குழுவினர். பெங்களூரில் நடத்துவது போல சென்னையிலும் நடத்தவேண்டுமென அவர்கள் வந்தி ருந்தார்கள். பல சுற்று விவாதங்கள் அவர்களோடு நடந்தன.

ஆனால் அவர்கள் பணம் செய்வதில் அதிக குறியாய் இருந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டதால் நாமே எல்லாம் செய்யலாம் என்று முடிவெடுத் தோம். அத்தெளிவான முடிவுக்கு காரணமாயிருந்தவர்களில் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு அவர்களும் ஓவியர் மருது அவர்களும் முக்கியமான வர்கள். உண்மையில் “சென்னை சங்கமம்’ என்று பெயர் சூட்டியது இறையன்பு அவர்கள். நீங்காது பதிந்துவிட்ட இளங்கன்று முகத்தினை முத்திரையாய் வரைந்தவர் மருது அவர்கள். இன்று சென்னை சங்கமம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கலை-பண்பாட்டு விழாவாக வளர்ந்து நிற்கிறது. ஈராயிரம் கலைஞர்கள், இருபது அரங்குகள், லட்சக்கணக்கான மக்கள் என பிரம்மாண்டமான இந்நிகழ்வை நிர் வகிக்கும் அனுபவங்களை எழுதவே ஏழெட்டு “மறக்க முடியுமா?’ களங்கள் தேவைப்படும். அது இப்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்பாராத பெருவெற்றியோடு நின்ற முதல் சங்கமத் திற்குப் பின் நடந்த சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்

Wednesday, May 20, 2009

தலைவன் இருக்கின்றான்.... தமிழ் ஈழம் மலரும்.... இலங்கையில் டி . என் . ஏ. பரிசோதனை செய்யும் வசதியில்லை.. செய்தி

சென்னை: இலங்கையில் மரபணுச் சோதனை எனப்படும் டிஎன்ஏ டெஸ்ட்டிங் மற்றும் மேப்பிங் செய்வதற்காக அடிப்படை வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை என இந்திய தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் பி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.



டாக்டர் சந்திரசேகரன் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் துறை இயக்குநராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ[^] விசாரணைக்கு பேருதவியாக இருந்தவர். இவர் தான் சிதைந்து போன தணு, சிவராசன் ஆகியோரின் உடல்களை அடையாளம் காண உதவினார்.

இந் நிலையில் பிரபாகரன் இறந்ததாக ராணுவம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துவிட்டதாகவும், அவரது மகன் சார்லஸ் ஆண்டனியின் டிஎன்ஏ சோதனையும் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளது இலங்கை ராணுவம்.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள சந்திரசேகரனை தட்ஸ்தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவரது பேட்டி:

கேள்வி: உடனடி டிஎன்ஏ சோதனை செய்வதற்கான நவீன வசதிகள் இலங்கையில் உள்ளதா?

பதில்: எனக்குத் தெரிந்து 2008 வரை அங்கே அப்படிப்பட்ட வசதிகள் இருந்ததாக நினைவில்ல்லை. இலங்கை நீதிபதிகள் சமீபத்தில் பெங்களூர் வந்திருந்தனர். அவர்களுக்கு நாங்கள்தான் தடயவியல் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் குறித்த பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தோம். அதன்பிறகு அங்கே டிஎன்ஏ சோதனைக்கான வசதிகள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை.

அப்படியே இருந்தாலும், இரண்டு மணி நேரத்திலெல்லாம் டிஎன்ஏ சோதனையை நடத்தி முடிப்பதாகச் சொல்வதென்றால்... என்ன விளையாடுகிறார்களா!. இதென்ன ரத்த, சிறுநீர்ப் பரிசோதனையா...!. பிரபாகரன் உடல் என்று கண்டெடுத்ததாக இவர்கள் காட்டுவது வடக்கு இலங்கையில். கொழும்பிலிருந்து ஃபோரன்ஸிக் லேப்பை அங்கே நகர்த்திக் கொண்டு போய் டெஸ்ட் செய்தோம் என்று சொல்ல வருகிறார்களா...!!.

அடுத்து, டிஎன்ஏ டெஸ்ட் என்பதே லேசுபட்ட காரியமல்ல. இறந்த ஒருவரது ரத்தத்திலிருந்து டிஎன்ஏ பார்க்க முடியாது. உடலின் திசுக்களை எடுத்து தான் சோதிக்க வேண்டும். அதன் பிறகும் கூட நேரடியான முடிவுகள் கிடைக்காது. 'நான்தான் பிரபாகரன்' மரபணு என்று வந்து அது சொல்லிவிடாது. ஒரு பார்கோட் (bar code) மாதிரிதான் உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும். இந்த ரிசல்டை வைத்தும் பிரபாகரன் மரபணு இதுதான் என்றும் கூற முடியாது. அதனுடன் ஒப்பிட, பிரபாகரன் உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள, திசுக்களில் பெறப்பட்ட டிஎன்ஏ சோதனை முடிவுகள் இருக்க வேண்டும்.

இலங்கையிடம் அப்படி ஏதாவது இருக்கிறதா... பிரபாகரன் உயிருடன் இருந்தபோது ராணுவத்தினர் அவரிடம் இருந்து ரத்த, திசு மாதிரிகளை வாங்கி வைத்திருக்கிறார்களா?...

கேள்வி: சார்லஸ் மற்றும் பிரபாகரன் மரபணுக்கள் ஒத்துப் போவதாகச் சொல்கிறார்களே?

பதில்: பிரபாகரன் மகன் சார்லஸ் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு நாள் கழித்தே பிரபாகரன் உடலைக் காட்டினார்கள். இதில் டிஎன்ஏ சோதனை நடத்துவது எப்படி சாத்தியம்?. முட்டாள்தனமான வாதம் இது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்க முயலும் இலங்கை ராணுவம் அதற்காக விஞ்ஞானப்பூர்வ வழிகளை கேலிக்குள்ளாக்குவது போல் பேசி வருவதாகவே எனக்குப் படுகிறது.

கேள்வி: ராணுவம் காட்டியிருப்பது பிரபாகரன் உடல் இல்லை என்று கூறப்படுகிறதே...

பதில்: இதில் சந்தேகங்கள் வருவது இயல்புதான். காரணம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது உண்மையென்றால் அதற்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர் சயனைடு சாப்பிட்டு இறந்திருக்க வேண்டும். அப்படியென்றால் அதனால் ஏற்பட்ட அறிகுறிகள் காயங்கள் வாய், நாக்கு, முகத்தில் இருந்திருக்கும். ராணுவம் காட்டிய படத்தில் அப்படி எதுவுமே இல்லை.

அடுத்து பிரபாகரன் எப்போதும் பிஸ்டல் வைத்திருப்பவர். தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்றால், அதற்கான சரியான காயங்கள் இருக்க வேண்டும். தலைப் பகுதியில் சுட்டுக் கொண்டிருந்தால் முழுமையாக உருமாறியிருந்திருக்கும். அதற்கும் வாய்ப்பில்லை.

மூன்றாவது சாத்தியம், ராணுவத்தால் சுடப்பட்டு இறந்திருக்கலாம். ராணுவம் அப்படித்தான் கூறுகிறது. டபுள் பேரல் கன் மூலம் சுட்டுக் கொன்றதாக சொல்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால் தலைப்பகுதி மட்டும் காயமடைந்தும், மற்ற பகுதிகளில் சின்ன சுருக்கமோ, கரும் திட்டுக்களோ கூட இல்லாமல் இத்தனை தெளிவாக இருக்கவும் வாய்ப்பே இல்லை.

சுட்டபோது பாதி தலை கழண்டு விடும், ஆனால் முகம் அப்படியே இருக்கும் என்பதை யாராவது நம்புவார்களா...

ஏற்கனவே இறந்தவரை சுட்டிருக்கலாம்...:

நான்காவது சாத்தியக்கூறு ஒன்றும் உள்ளது... அதாவது, ஏற்கெனவே இறந்துவிட்ட உடலில் சுட்டுவிடடு, தாங்கள் கொன்றுவிட்டதாகக் கூறுவது. ராணுவம்[^] அதைத்தான் செய்கிறதா என்று தெரியவில்லை.

கேள்வி: கருணா, தயா போன்றவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்களே...?

பதில்: அது ஒரு சடங்கு. இறந்தவர் உடலை அவருக்குத் தெரிந்தவர்களை வைத்து அடையாளம் காட்டுவது ஒரு நடைமுறை. ஆனால் அதற்கு பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்டதன் உடைகளைக் களைந்து சேறு பூசி காட்ட வேண்டிய அவசியமென்ன... பிரபாகரன் உடலில் உள்ள மச்சங்கள் அவர் மனைவிக்குத்தான் தெரியும். கருணாவுக்கும் தயாவுக்கும் என்ன தெரியும் என்று நிர்வாணப்படுத்திக் காட்டுகிறார்கள்?. இது முழுக்க முழுக்க நாகரிகமற்ற, அபத்தமான செயல்.

கேள்வி: பிரபாகரன் உடலை என்ன செய்வார்கள்?

பதில்: பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதத்தை விடுத்துப் பாருங்கள். 30 ஆண்டுகள் உலகின் கவனத்தைத் தன் மீது திருப்பி வைத்திருந்தவர் பிரபாகரன். அவரது உடல் என்று ஒன்றைக் காட்டும் ராணுவத்தினருக்கு, அது பிரபாகரனுடையதுதான் என்பதை அழுத்தமாக நிரூபித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது.

அதிலும், ஜனநாயக நாடு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் நாடு என இலங்கையை அறிவித்துள்ள ராஜபக்சே, பிரபாகரன் மரணத்தை உரிய விஞ்ஞான முறைப்படி உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்து அவரது உடலை அப்படியே பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினர் அந்த உடலை எப்போது கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு இலங்கைக்கு உள்ளது. போரில் பிடிபட்ட பிணங்களைக் கூட சர்வதேச சட்டப்படி அவர்களது குடும்பத்தினர் இறுதிக் கடன் செய்ய வசதியாக ஒப்படைக்க வேண்டும்.

எனவே பிரபாகரன் உடல் என்று இவர்கள் காட்டுவதை, அந்த மரணம்[^] உறுதியாகும் வரை வைத்திருந்து பின்னர், அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் பேராசிரியர் சந்திரசேகரன்.

சென்னையில் டிஎன்ஏ சோதனை நடத்த திட்டம்?:

இந் நிலையில் அது பிரபாகரன்[^] உடல்தானா என்பதை உறுதி செய்ய சென்னையில் டிஎன்ஏ சோதனை செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
Thanks to Thatstamil