Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, March 28, 2010

என் இதயம் துளைத்த......!


ரொம்ப நாளா பதிவு எழுத.........
எழுத நினைச்சேன் முடியல.......!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் ,இப்ப எழுதறேன்...!அதுவும் பர்சனலான விசயம்,
காதலிமட்டுமல்ல,காதலும் என்ன வெறுக்குதோன்னு நினைக்கிற அளவு...!
விரக்தியின் எல்லை ////// என்ன ..... கழுதை கெட்டா குட்டிசெவறு...!
மனிசன் கெட்டா... டாஸ்மார்க் பாரு,,,,
**********************************************************************************
காதலிச்சா மட்டும் தான் காதல் வருமா என்ன...
ஒரு சாம்பிள்

சூரிய விரோதம்

கருந்தோல்
வெயில் அங்கி

உடல் கன்றிச் சிவந்து
ஒளி குடிக்கும் தாவரம்

சிறு களைகொத்தியுடன்
தன் நிலம் திருத்தித் தவழும்

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வம்
என் அன்னை

பனை தாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த
வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுஞ் சூரியன்

கைக்குக் கிடைப்பானெனில்
இவ் அரிவாளால்
வெட்டித் தரிப்பேன்
ஒரு சுள்ளி போலே

*******************************************************************************************
வற்றிய குளத்தின்
களிமண் சகதியில்
துள்ளித் துள்ளி விழுவது
மீனின் துடிப்பா
குளத்தின் துடிப்பா?

இதை எழுதியது நான் இல்லைங்.... அவரை அறிமுகப்படுத்து அளவுக்கு நான் உயரவில்லை எனினும்...நட்பின் பொருட்டு நவிழ்தல் ,

அவர்தான்



இவர் தான் இமயங்கள் இணையும் ரெட்டசுழி படத்தின் துவக்க பாடலானபட்டாளம் பாருடா எனும் பாடலை எழுதி உள்ளார்.... பொதுவாக தமிழ் திரைப்படங்களில் சிறுவர்களுக்கான விடயங்கள் மிக குறைவு... ஆனால் வெயில் ,பசங்க படங்கள் விதிவிலக்கானவை.. இந்த பாடலை கேட்டும் போது திரையாக்கம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகிறது...
மற்றுமொரு சிறுவர்..கொண்டாட்டத்திற்கான , அழகான பாடல்...
கேட்கையில் வேறோரு உலகில் நான் பயணிப்பதை போல் உணர்கிறேன்,இசை (piper ) போல ஒருவகையான் மேறகத்திய சாயலை கொண்டுள்ளது...
கார்த்திக் ராஜாவின் உழைப்பு .... வீண்போகவில்லை... ராகாவில் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் உள்ளது.....
நம் பக்கத்தில் இருந்து மேலும் ஒருவர்...மிக்க மகிழ்ச்சியாக உள்ளது....!
மிக எளிமையான..மனிதர்...அவர்தம் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற
அருட் பேராற்றல் , அருள் புரியட்டும்...!

*******************************************************
வர்ணங்கள் , ஓவியங்கள் வரைவதில் நாட்டம் உண்டெனில் இது உங்களுக்கு உதவும்.....

இது ஒரு புது உலகை உங்களுக்கு ஏற்படுத்தும்....

Twitter, petre,Flame





நம்ம அனைத்து சொந்தங்களுக்கும்....வருகிற 22-03-10, அன்று அருள்மிகு கொண்டாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ,நீர் மோர் மற்றும் பானக்கம் ,ஊற்றுவதால், தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
கேட்டுகொள்கிறேன்...


service our motto

Thursday, February 14, 2008

பொதுவுடமை..? காதல்.....? காதல் என்பது...?

காதல், .....?
இன்றைய இளசுகளின் கண்களில் நுழைந்து, இதயத்தை துளைப்பதோடு மட்டுமல்ல ,
அவர் தம் பெற்றோரின் பாசத்தையும் ,உற்றார் , உறவினர், நண்பர்கள், பணம், பொருள், பதவி ,ஏன் சில பல சமயங்களில்
காதலிப்பவர்களையே நொடியில் அழிக்க கூடியதும்,இனம் , மதம் , மொழி , வேறுபாடின்றி மனிதனை ஆக்கிரமிக்கும்.... காதல்......?
இதை பற்றிய என் இன்னொறு பதிவில் இட்டதை இங்கு மீள் பதிகிறேன்


காதல் ...இந்த மூன்றெழுத்து மந்திரசொல் ..... உலகில் எத்துணையோ சரித்திரங்களை ... .உருவாக்கியும் , அழித்தும் , உள்ளது , எப்படி ...

காதல் ...மனிதனுக்கு மட்டுமே வரும் ...ஒரு உன்னதமான உணர்வு...ஏன் என்றால் , எந்த விலங்குகளும் , தன் இணை மீது அதுவும் கூடும் காலங்களில் மட்டுமே ... காமத்தால் காதல் கொண்டிருக்கும்...

ஆனால் மனிதன் மட்டுமே ..

தன் இணை மீது , கல்யாணத்திற்கு முன்னும் ,கல்யாணத்திற்கு பின்பும் ,பிறப்பிலும், இறப்பிலும், அவன் ,அவள் சுக ,துக்கங்களிலும்,காதல் கொண்டிருக்கின்றான்...

ஆனால் காதல் ஆணுக்கு , பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீது வருவது இன்றி, மனிதன் தம் தாய்நாடு,மொழி, இனம், வாழ்க்கை, லட்சியங்கள் ,ஆகியவற்றின் மேலும் காதல் கொண்டிருந்தான் அதனாலேதான் வெற்றியும் ,பெறுகின்றான்...
காந்திஜி தீண்டாமை ஒழிப்பு மீதும் ..., நேதாஜி தாய் நாட்டின் மீதும், பாரதி தமிழ் மீதும்...,அம்பானி தொழில் மீதும் , கொண்ட காதலினால்தான் வெற்றியும் பெற்றார்கள்... ஹிட்லர் , மாவீரன் என்று போற்றப்படும் அலெக்சாந்தர் ,முசொலின் , மேலும் பலர்

ஆகையால் மனிதனின் காதல் மண் , பெண் , பொன் , பொருள் , இவைகளை தாண்டி வாழ்வின் ,லட்சியங்கள் ,சிந்தனைகள் மீதும் உருவாகும் போது ....அவன் வெற்றி பெற்று வரலாற்றில் ஜொலிகின்றான் ......

காதல் செய்வீர்,காதல் செய்வீர், இவ்வையகம் இன்புற ......

முதலில்...
வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,! வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,!


தலைப்புக்கு சம்பந்தமாய்.... பாலைவன் ரோஜாக்கள்





சுப்பர் ஸ்டார்


ஒரு புது படம்