Showing posts with label rajarajan. Show all posts
Showing posts with label rajarajan. Show all posts

Wednesday, January 13, 2010

என்னை கவர்ந்தவர்களும் ,பதிவர் அரசியலும்...


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ...

இன்பம் துவக்கி.... இல்லம் ,உள்ளம் ... நிறைந்த மகிழ்வை ,

வெண் கதிர்கோன்.... அருளட்டும் .....


கடந்த
வருட நினைவுகளின் தொடர்ச்சி...

கடந்த
வருடம் ....புதிதாய் புதிய நண்பர்கள் பலருக்கும் ,
எனக்கும்
நட்பெனும் ஜனனம் கொடுத்த ஜனவரி ....
தலைவர்
வெயிலானுக்கு மின்னஞ்சல் அனுப்பியதன் விளைவாக ,செயலாளர் அமுக்கினார் ,பொருளாளர் ஈரவெங்காயமும் ,மற்றும் ராமன்குட்டியும் .. அப்புறமாக அண்ணனும் , அன்பின் முரளியும் அறிமுகமாகி வருடமாகின்றது ....

முதல் பதிவர் சந்திப்பு பிரபல பதிவர் அதிஷா , அவரின் சகோதரி திருமணத்தில் நடந்தது , அங்கு தான் அண்ணாச்சியையும் , சஞ்சய் காந்தியையும் , அதிஷாவையும் , மட்டுமல்ல தலையையும் , செயலையும் முதன் முதலில் சந்தித்தேன் .....

உரையாடல் பின்வருமாறு...
நண்பர்களே வணக்கம் ,

நானும் திருப்பூர்காரன்தான் ,இன்றுதான் தங்களைப்பற்றி அறிந்தேன் , பேரரசன்

-----

நல்வரவு பேரரசன்.
முதல்ல உங்க வலைத்தளத்தை சரிபண்ணுங்க. வலைப்பக்கத்தை திறந்தால் பாப்-அப் விண்டோ திறக்கிறது.
சரி! நண்பர்களே விரைவில் திருப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிவிடலாம்.
--
அன்புடன்,
☼ வெயிலான்.
---------
சிக்கிட்டாருய்யா! அமுக்கு!
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

--------
ஒருத்தர் கிடைக்கக்கூடாதே!!!! அதுக்குள்ள அமுக்கிடுவீங்களே!!! :) :)

ம்ம்ம்..

வாங்க பேரரசன்!!! ஒருநாளைக்கு எல்லோரும் மீட் பண்ணுவோம்!!

ஆதவன்
-------
சிக்கிண்டாருடோய் ஒரு பதிவரு...
வாயெல்லாம் நம நமங்குது வெயிலான்...
போட்டுத் தாக்கிறலாமா..?

வியாழன் மதியம் லன்ஞ்..?

சீக்கிரமா கன்ஃபார்ம் பண்ணுங்க..

regards
Saminathan


---------

போட்டுத் தாக்கிறலாமா?னு கேட்டதும் செந்தில ஆளவே காணோம். பயப்படாதீங்க செந்தில்!
மொதல்ல உங்க அறிமுகத்தை சொல்லுங்க.
ஞாயிறாயிருத்தல் நலம்ங்கிறார் பரிசல்!
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? சொல்கிறீர்கள்?
அவரவர் விருப்பங்களைச் சொன்னால், விரைவில் சந்திக்கலாம்.
முரளி,
கடலையூர் செல்வம் மின்னஞ்சல் முகவரியையும் இதோடு சேர்த்து விடுங்கள்.
பரிசல்,
தமிழ் உதயா முகவரி........
வேறு யாராவது திருப்பூரார்கள் இருந்தால் அவர்களையும் இந்த மின்னஞ்சலில் சேருங்கள்.
சந்திக்கலாம் விரைவில்......
அன்புடன்,
☼ வெயிலான்

இதற்கு அப்புறம் எழுத....பொதுகூட்டம் கூட்டனும்...,இப்படியான பதிவர் உலகத்தில்,, நானும்...விழுந்தேன்.......
இத்தகைய வியத்தகு நண்பர்களை தந்த காலமெனும் ,ஓடத்திற்கு ஓராயிரம் நன்றி.....

நானும் சீரியஸா நிறைய எழுத நினைகின்றேன் முடியல.... அதனால்...

2010 நான் மிக எதிர்பார்க்கும் படம் , தமிழ்படம்...
ஆமாங்க... தயாநிதி அழகிரி தயாரிக்கும் தமிழ்படம்...
இயக்குனர் அமுதன்.....

அது பற்றி தொலைகாட்சியில் வந்த நேர்காணல்....


ப்டம் தான் , நல்ல காமெடியா இருக்கும்னு , பார்த்தா? நேர்காணல் அதவிட , காமெடி போங்க....

சிவா , தயாநிதி அழகிரிகிட்ட கேட்குறாரு.... எதனால இந்த படத்தை தயாரிக்கணும்னு நினைசீங்கன்னு....


அதுக்கு அவர் என்ன பதில் சொல்லி இருப்பார்ன்னு நினைகிறீர்கள்...?

என்னை மதுரைக்கு தூக்கிடு போய்..மிரட்டி படம் எடுக்க சொன்னாங்கன்னு...!

மனுசன் ரியலி , சிம்பிள்...அதான் ... எனக்கு அவரை பிடித்தது...
***************************************************************************
பின்னலூருக்கு வருகை புரிந்த அண்ணன் திரு,தாமிராவோடு ..... கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.... அதுவும் அவதாரை மிஸ் பண்ணி... சாரி முரளி....


மிக மிக அழகான , மாலைபொழுதாக ...இனிமையா (ABSOLUTE) இருந்தது.... ஈரோட்டு மாப்பிள்ளைகள் கார்த்தியும்.. (boobs)அதாங்க பூபதியும்...ஈரோட்டு சிங்கம் வால்பையனும்...கலந்து சிறப்பித்தார்கள்.....மேலும் திருபூரில் இருந்து இளைய இளவல்...இம்சித்தார்....


மகிழ்வான..நிறைவான தருணம்.... யாதனில் நண்பர்களுடன் உண்ணும் விருந்து...
விகடன்ல மதன் சொல்லி இருக்கிறாரு... அதன் படியே..மிக மிக நிறைவான , மகிழ்வான தருணம்.. இது...

நன்றி நண்பர்களே...

******************************************************************

சரி பொங்கல் அதுவுமா... பேரரசன்னு பெயரை வச்சுகிட்டு சும்மா , இருந்தா எப்படி...

சாம்ராஜ்யத்தை சுத்தி பார்க்க போறேன்... அதுவும் பறக்கும் ஒத்த கொம்பு குதிரையில்..(unicorn) கும்பகோணம், ஜெயம் கொண்டம்(கங்கை கொண்ட சோழபுரம்) அப்புறமா தரணி புகழும் ..பெரிய கோவில்னு பெரிய பட்டியல்...
வெற்றிகரமா வந்து மிச்சம் சொல்லுறேன்.....
நண்பர்கள் தொடர்புக்கு...
98947 83597

இங்கே பதிவு செய்தா 4 பேருக்கு உதவியா இருக்கும்....