Thursday, April 3, 2008

கர்நாடகாவை கண்டிக்கும் உண்ணாவிரதத்திற்கு ரஜினி வருகை......!

தமிழ்க திரையுலகமே திரண்டு கர்நாடகாவின் போக்கை கண்டித்து நடத்தும்,உண்ணாவிரதத்தில்,ரஜினி கலந்து கொள்வாரா....?

இதுதான் இப்ப எல்லோருடைய கேள்வி....? முக்கியமா.... தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் கேட்க்கும் கேள்வி....?

கண்டிப்பா, சார்ப்பா ரஜினிகாந்த் வருகின்றேன் என்று கூறிஉள்ளதாக செய்தி.

நன்றி ஒரே இந்தியா(என்ன பொருத்தம் பாருங்க)


இப்ப நான் தெரியாம கேட்கின்றேன்....

வந்தாரை வாழவைக்கும் தமிழகம், அப்படின்னு சொல்லுறோம், உண்மைதான் ஒத்துக்கொள்கின்றேன்...
நாமதான் ரஜினியை வாழ வைத்தோம்னு , சொல்லுறீங்க , சரி....!

இப்ப ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி நம்ம விட்டுக்கு கூட்டீட்டுவருகிறோம்,நம்மளை விரும்பி,நம்மளை நம்பி அந்த பொண்ணு கூட வருது ,வாழுது..இப்ப ஒரு சின்ன பிரச்சினை,அந்த பொண்ணோட அம்மாவினால் அப்படின்னா...?
அந்த பொண்ணுகிட்ட உனக்கு நான் வேணுமா...?
இல்லை உன்னை பெத்து வளர்த்த அம்மா வேணும்னா...? கண்டிப்பா அந்த பொண்ணு தன்னோட எதிர்காலம் ,எல்லா யோசிச்சு...கண்டிப்பா...எனக்கு நீங்கதான் வேணும்னு சொல்லுவா இல்லையா...!

அது மாதிரிதான் இதுவும்...தமிழன் ஏன் இன்னும் பின் தங்கியே இருக்கின்றான் ,என்றால் அவனை பிரிக்கும், பிரித்துக்கொண்டிருக்கும் பிரிவினை வாத சக்தியான சாதி,சாதி ,சாதி....

அவனை ஒன்று சேர்க்கும் ஒரே விசயம்...தமிழ்
நல்ல வேளையா ஒவ்வோரு சாதியும் , ஒவ்வொரு மொழி பேசுலை, இல்லைன்னா தமிழன்னு ஒரு பிரிவே இருந்துருக்காது...

எப்ப ஒவ்வோரு சாதியும்,சாதிக்கட்சியும்,தமிழ் நாட்டுல ஒழியுதோ , அன்னைக்குதான் உண்மையிலே தமிழனும் , தமிழ்நாடு முன்னேறும்...

மதிப்புக்குறிய,அம்மா ,அய்யாக்களே.... !
தயவு செய்து கேட்டுக்குறேன்,தமிழ்னா ...ஒன்றுபடுங்க.... அதுதான் நமக்கும் , நாட்டுக்கும்,நல்லது.... நான் தமிழன் , தமிழன்னு சொல்லி பிளவுபடாதீங்க....



நம்ம தம்பியோ அல்லது அண்ணோ , சண்டை போட்டால், நாம் எப்படி விட்டுக்குடுத்து போவேமோ....! அதுபோல் நினைத்துகொள்ளுங்கள்...மேலாக
ரஜினி,வருவாரா...? இங்க சாப்பிடரவங்க கட்டாயமா வரணும்னு... நதி நீர் இணைப்பை திட்டதிற்கு முட்டு கட்டை போடுர ,சொல்லுர,கேட்கிற மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஓட்டிற்காக ,பணத்திற்காக, புகழுக்காக இந்தியாவை துண்டாட நினைக்கும் தமிழக , கர்நாடக அய்யாக்களே ,


வெள்ளைக்காரன் நம்மை பிடிச்சதுக்கும்,
இந்தியா இன்னும் ,வல்லரசாகாமல்(சாகாமல்)இருக்கிறதுக்கும்...?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும்வெளிநாட்டில் என்று நாம் பாடியது நிலைக்க வேண்டுமானால்...

நம் இந்தியாவாக, ஆம் பள்ளிப்புத்தகத்தில் உள்ள படி,இந்தியா,
பல்வேறு மதம்,மொழி,இனம்,பழக்கவழக்கங்கள்,உணவு,உடை,காலநிலை,கலாச்சாரம்,
கொண்ட...இன ,மத,மொழி சார்பற்ற மக்களாட்சி நாடு......இதை நீங்கள் வளர்க்க கூட,வேண்டாம்...!

அப்படியே நான்/நாம் தவழ்ந்த,வளர்ந்த , நம் ஒரே இந்தியாவாக விட்டுவிடுங்கள்....


க இரா.செந்தில் நாதன்
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
தமிழ்ன் என்று மட்டும் கூறி தனித்திராமல்..
வாழ்க பாரதம்
(நானும் தமிழந்தானுங்க)

4 comments:

said...

அம்மா மருமகள் சன்டை - இந்த உதரானம் இங்கே சுத்தமா ஒத்துப்போகலயே... தவறான உதாரணம்.

said...

முரளி said...

அம்மா மருமகள் சன்டை - இந்த உதரானம் இங்கே சுத்தமா ஒத்துப்போகலயே... தவறான உதாரணம்.

வாங்க நண்பரே...

தங்கள் வருகைகும், கருத்துக்கும் மிக்க நன்றி...

நான் இந்த பிரச்சினையை ஒரு குடும்ப பிரச்சினையாய் பார்க்கின்றேன்...ஏன்னா நாமெல்லாம் இந்தியா என்கிற பாரத அன்னையின்
ஒரு தாய் மக்கள்...

said...

ஒரு தாய் மக்களுக்கு ஏன் தாகத்துக்கு தண்ணி தரமறுக்கிறான்?
நாம் ஒருதாய் மக்கள் என்ரு நினைப்பது மட்டும் பேச்சுக்கு ஆவாது கன்னடனும் நினைக்கனும்,நினைக்கும் வரைக்கும் அவனுக்கு அடி போட்டாத்தான் தமிழன் மேல் இனி கை வைக்கமாட்டான்.

said...

Blogger பிருந்தன் said...

ஒரு தாய் மக்களுக்கு ஏன் தாகத்துக்கு தண்ணி தரமறுக்கிறான்?
நாம் ஒருதாய் மக்கள் என்ரு நினைப்பது மட்டும் பேச்சுக்கு ஆவாது கன்னடனும் நினைக்கனும்,நினைக்கும் வரைக்கும் அவனுக்கு அடி போட்டாத்தான் தமிழன் மேல் இனி கை வைக்கமாட்டான்.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி திரு.பிருந்தன்

சகோதரர்கள் இடையே யாரேனும் ஒருவர் விட்டுகொடுத்துதான் செல்ல வேண்டும்....