Thursday, December 27, 2007

தமிழ் வளர்ப்போம் , வாருங்கள்.... இயக்குனர் சீமான்

இது நாள் வரை , தம்பி பட இயக்குனர் சீமானை , ஒரு சராசரி சினிமா இயக்குனராக நினைதிருந்தேன்...

அவரின் தம்பி , படம் பார்த்த அனைவரையும் , பாதித்து இருக்கும் என்று நினைக்கின்றேன்,,

கதா நாயகன் ,சராசரி சினிமா இலக்கணங்களை உடைத்து, கோட்டு , சூட்டு போடுவதில்லை, பாரீன் காரில் வருவதும் இல்லை, அட.... கூலிங் கிளாஸ் கூட அணிவதில்லை,

அவன் செய்யும் காரியங்களூம்,சிந்திக்க தெரிந்த சாதாரண மனிதன் , சமுதாய சீர்கேடுகலால் ,உந்தப் பட்டு , பொருமை இழந்து செய்வனவே...



அதன் இயக்குனர் சீமான் , தன் தாய் மொழியின் நிலமை கண்டு.... பொங்கி எழுகின்றார்.... தமிழினமே..சிந்திப்பீர்....




அவரின் தமிழ் பற்று குறித்தும் , பிற மொழிகற்றல் குறித்து கூறும் போது ,
ஒரு வீட்டிற்க்கு எத்தனை... சன்னல்கள் வேண்டுமாணாலும், இருக்கலாம் , அது போன்று பிற மொழிகளும் ,வீட்டின் நுழைவாயில் போல் தமிழ் என்கிறார்...




இவர் கூற்றிலும் உண்மை உள்ளது , தமிழர்களே சிந்திப்பீர்...

அன்புடன்

இரா .செந்தில் நாதன்

2 comments:

said...

பதட்டமின்றி, விரோதமின்றி, துவேஷமின்றி நிதானமாக நமது அன்றாட பயன்பாட்டில் தமிழின் விழுக்காட்டை அதிகப்படுத்தவேண்டும் என்பதே என் ஆவல். அப்போது தேவையற்ற நமது பல்வேறு மயக்கங்கள் விலகும், தமிழ் சமூகத்தின் தன்னம்பிக்கை வலுப்பெறும்.

அன்புடன்
முத்து

said...

வருகைகு மிக்க நன்றிகள் முத்து,

ஆம் , அந்த நாளை எதிர்பார்க்கின்றோம்