Wednesday, November 7, 2007

நம்பிக்கை ஒளி

இணையத்தில் பார்த்த படம் ,
ஒரு சிறிய அல்ல சற்றே பெரிய குடும்பம், அவர்கள் உறங்க கூட , போதிய இடமில்லை , ஆனாலும் உயிர்களின் மேல் கருணை ,கொண்டு தம் வளர்ப்பு பிராணிகளுக்கு , தம் சிறு படுக்கையில் ,
இடம் கொடுத்து ,மழைநீர் கூரையில் இருந்து ,ஒழுகும் போதும் கூட, அவர்களின் முகத்தில் உள்ள ,நிம்மதியான புன்னகையை , பாருங்கள் , அத்தனை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ,

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது , பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையே பிரச்சினையாய் உள்ளவர்கள் , மகிழ்ச்சியாய் வாழும் பொழுது ,நம் வாழ்க்கையில் உள்ளவை பிரச்சினையே அல்ல, கிடைத்த வாழ்க்கையை , மனம் நிறைவாக ஏற்று , மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்...

இருளை அகற்றும் ஒளி போல், நாம் மனத்தில் உள்ள கவலைகளை நம்பிக்கை எனும் ஒளி(உழி ) கொண்டு அகற்றி ,வாழ்வு செழிக்க
அனைத்து நல் இதயங்களுக்கும் , உள்ளம் கனிந்த , தீபத்திருநாள் வாழ்த்துகள்...

அன்புடன்

கரா .செந்தில் நாதன்

2 comments:

said...

அருமையான படம்.
ஆனால் இது ஒரு ஓவியம் என்றே நினைக்கிறேன்.

said...

ஆமாம் , தங்கள் வருகைக்கு நன்றி.. அண்ணா
அன்புடன்
இரா .செந்தில் நாதன்