தேவதைகளும்....மற்றும் சாத்தான்களும்...(AngelsandDemons), டாவின்சி கோட், படக்குழுவினரால் எடுக்கப்பட்ட படம்..என்பதால் இன்று பார்க்க சென்றிருந்தேன்...

டான் பிரவுனின் இரண்டாவது நாவலான தேவதைகள் மற்றும் சாத்தான்கள்..கதைதான் களம்.. மற்றும் தலைப்பும்...இயக்கம் ரான் கோவார்டு, நாயகன் டாம் கான்க்ஸ் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல...! நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை....
வாடிகனில் போப் இறந்த பிறகு.. புதிய போப் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் வேளையில்.. கனடாவில் ஓர் புது அணு ஆராய்ச்சியின் விளைவாக இறைதுகள்,பெரும் சக்திவாய்ந்த துகள் ஒன்றை கண்டுபிடிக்கின்றார்கள்... அடுத்து போப்பாக தகுதியுள்ள நான்கு மதகுருமார்கள் கடத்தப்படுகின்றார்கள்...அணுத்துகளும் கடத்தப்படுகின்றது... இவற்றை


படம் பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் கருத்தை கூறுங்கள்... இதில் என்ன வியப்புக்கு உரிய விசயம் என்றால்...அங்கு தங்கள் மத நம்பிக்கையை எப்படி எல்லாம் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர்... நம்ம ஊரில் இவ்வாறு படமோ , அல்லது நாவல்களோ வருவதற்கு இன்னும் , பல வருடங்கள் ஆகலாம்.. கமல் ஒரு தசாவதாரத்தில் ரங்கராஜனை முன்னிறுத்தியதையே நம் மக்களால் பொருக்க இயலவில்லை...?
வாடிகன் மிக அழகாக உள்ளது, அட்டகாசமாக உள்கட்டமைப்பு கொண்டுள்ளது ..என் நினைக்கின்றேன்... வாய்ப்பு கிடைத்தால் , ஒரு முறை ..அல்ல பல முறைகூட சென்றுவரலாம்....
ஒரு காட்சி
வாடிகன் பாதிரியார்: கதாநாயகனிடம், உங்களுக்கு ஆண்டவர் மேல் நம்பிக்கை உள்ளதா...?மானிட கடவுள்கள் மேல் அல்ல... ஆண்டவரிடம் நம்பிக்கை உள்ளதா...?
கதாநாயகன் :அறிவு ஏற்க மறுக்கிறது...!
வாடிகன் பாதிரியார்:உங்கள் இதயம்...?
கதாநாயகன் :இதயம்... அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என்கிறது..!
அனேகமாக , இந்த படமும்,டாவின்சி கோட் போல் சர்ச்சயை ஏற்படுத்துமா....? என்பது போக போக தெரியும்.
1 comments:
நீங்க திருப்பூர் தானே.. இந்தமாதிரி படங்கள் வந்தால் என்னால் போகமுடிவதில்லை என்னோட நண்பர்கள் எல்லாம் வெளியூரில் செட்டில் ஆகிவிட்டார்கள். தனியாக சினிமாவுக்குச் செல்ல தயக்கமாக இருக்கிறது.
பார்ப்போம்... இந்த ஞாயிறேனும்
Post a Comment